News January 19, 2025

1,005 குடும்பங்களுக்காக உருவாகும் ‘டவுன்ஷிப்’

image

பரந்தூர் விமான நிலைய திட்டத்தால் பாதிக்கப்படும் 4 கிராம மக்களை மறுகுடியமர்வு செய்ய ‘டவுன்ஷிப்’ உருவாக்கப்படவுள்ளது. இதற்காக ‘மாஸ்டர் பிளான்’ என்ற பெயரில் முழுமை திட்டத்தை தயாரிக்கும் பணியை தனியார் நிறுவனமான ‘நைட் பிராங்’ தொடங்கியுள்ளது. மொத்தம் 245 ஏக்கரில் குடியிருப்பு, பள்ளி உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் ‘டவுன்ஷிப்’ அமையவுள்ளது. 1,005 குடும்பங்கள் அங்கு குடியமர்வு செய்யப்படவுள்ளன.

Similar News

News August 25, 2025

விஜய் பட சாதனையை முறியடித்த ரஜினியின் ‘கூலி’..!

image

விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான ‘கோட்’ படம் ஒட்டுமொத்தமாக ₹465 கோடி வசூலித்திருந்தது. இந்த வசூலை ரஜினியின் ‘கூலி’ படம் 11 நாள்களிலேயே முறியடித்திருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், படத்தின் வசூல் ₹500 கோடியை நெருங்கி வருவதாகவும் கூறப்படுகிறது. ரஜினி நடிப்பில் ஏற்கெனவே ‘2.O’ மற்றும் ‘ஜெயிலர்’ ஆகிய படங்கள் ₹600 கோடிக்கு மேல் கலெக்‌ஷனாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

News August 25, 2025

இனி ஆம்புலன்ஸை தாக்கினால் சிறை தண்டனை

image

திருச்சி EPS பிரச்சாரத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநரை அதிமுகவினர் தாக்கிய சம்பவம் சர்ச்சையானது. இந்நிலையில், ஆம்புலன்ஸ் வாகனம் & ஓட்டுநர் மீது தனி நபரோ, கூட்டமாகவோ தாக்குதல் நடத்தினால் 3-10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று அரசு எச்சரித்துள்ளது. கைதாகுபவர்கள் மீது ஜாமினில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் வழக்குப்பதியப்படும் எனவும் மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.

News August 25, 2025

BREAKING: தமிழக ஆசிரியர்களுக்கு நற்செய்தி

image

தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தமிழகத்தை சேர்ந்த 2 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சென்னை மயிலாப்பூரை சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியை ரேவதி பரமேஸ்வரன் மற்றும் திருப்பூர் பாரதியார் நூற்றாண்டு அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியை விஜயலட்சுமி ஆகியோருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தினத்தையொட்டி செப்.5-ம் தேதி டெல்லியில் நடைபெறும் விழாவில் ஜனாதிபதி திரெளபதி முர்மு இந்த விருதை வழங்க உள்ளார்.

error: Content is protected !!