News January 19, 2025

அண்ணா பஸ் நிலையம் முன்பு ஜன.22-ல் போராட்டம் அறிவிப்பு

image

2003-க்கு பின்னர் பணியில் சேர்ந்த தொழிலாளர்களுக்கு பழைய ஓய்வூதியம் வழங்க வேண்டும், 15-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை தொடங்கிவழங்கிட வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, இம்மாதம் 22ஆம் தேதி நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையம் முன்பு சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெற இருப்பதாக TNSTC CITU தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.

Similar News

News November 15, 2025

குமரி: விஷம் குடித்து முதியவர் தற்கொலை

image

புத்தேரி நான்கு வழிசாலையில் நேற்று (நவ.14) ஒருவர் பேச்சு மூச்சின்றி கிடந்தார். அவரது உடலை கைப்பற்றி வடசேரி போலீசார் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் ஒப்படைத்தனர். அவர் விஷம் குடித்து தற்கொலை செய்தது தெரிந்தது. போலீசின் விசாரணையில், அவர் மேல்புறம் ஆர்.சி. தெருவைச் சேர்ந்த தொழிலாளி கிஷோர்(53) என தெரியவந்தது. அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். 

News November 15, 2025

குமரி: ரயில் மோதி ஒருவர் பலி

image

காவல்கிணறு ரெயில்வே தண்டவாளம் அருகே நவ 13ம் தேதி இரவு ரெயில் மோதி ஒருவர் இறந்து கிடந்தார். நாகர்கோவில் ரெயில்வே போலீஸ் விசாரணையில் திருவனந்தபுரம் விதுரா பகுதி லாரி டிரைவர் சரத்ராஜ்(32) என்பது தெரியவந்தது. இவர் காவல்கிணறு பகுதியில் இருந்து காய்கறிகள் ஏற்றிச்செல்ல அடிக்கடி வந்து செல்வாராம். அவ்வாறு வந்தபோது ரெயில் மோதி இறந்திருக்கலாம் அல்லது தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். 

News November 15, 2025

டிஎன்பிஎஸ்சி தொழில்நுட்ப பணிகள் பதவிகளுக்கு தேர்வு

image

அரசு பணியாளர் தேர்வாணையத்தால் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் பதவிகளுக்கான தேர்வு வருகிற 16ம்தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வினை கன்னியாகுமரி மாவட்டத்தில் கலைவாணர் என்.எஸ்.கே இன்ஜினியரிங் கல்லூரி மற்றும் சேவியர் கல்லூரி ஆகிய இரண்டு தேர்வுக் கூடங்களில் நடைபெறுகிறது. 310 தேர்வர்கள் தேர்வு எழுத உள்ளனர் என்று மாவட்ட ஆட்சியர் அழகுமீனா இன்று தெரிவித்தார்.

error: Content is protected !!