News January 19, 2025
பரோல் முடியும் முன்பே சிறைக்கு திரும்பிய கைதிகள்

இந்தாண்டு பொங்கல் பண்டிகையை குடும்பத்துடன் கொண்டாட 35-க்கும் மேற்பட்ட கைதிகள் பரோல் வழங்கக்கோரி விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் 21 நன்னடத்தை கைதிகளுக்கு 6 நாட்கள் பரோல் வழங்கப்பட்டது. கடந்த 14-ந் தேதி கைதிகளில் ஜெயிலில் இருந்து பரோலில் சொந்த ஊருக்கு சென்றனர். இந்த நிலையில் பரோலில் சென்ற 5 கைதிகள் 6 நாட்கள் முடியும் முன்பே சிறைக்கு திரும்பி உள்ளனர்.
Similar News
News May 8, 2025
வேலூர்: வேலை தேடும் இளைஞர்களுக்கு

IDBI வங்கியில் ஜூனியர் அசிஸ்டண்ட் மேனேஜர் பதவிக்கான 676 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு டிகிரி முடித்திருந்தால் போதும். 21-25 வயதுடைய இருபாலரும் விண்ணப்பிக்கலாம். இதற்கு மாதம் ரூ.51,000 சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இங்கே https://www.idbibank.in/ கிளிக் செய்து 20.08.2025 வரை விண்ணப்பிக்கலாம். செம்ம வாய்ப்பு மிஸ் பண்ணிராதீங்க. வேலை தேடுவோருக்கு ஷேர் பண்ணுங்க.
News May 8, 2025
வேலூர் +2 மாணவர்கள் கவனத்திற்கு

+2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், தமிழ்நாடு அரசு கலை & அறிவியல் கல்லூரிகளில் 2025-26ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் மே 27 வரை விண்ணப்பிக்கலாம். B.A,B.Sc,BCA உள்ளிட்ட பல்வேறு பட்டப்படிப்புகளுக்கு கிளிக் https://www.tngasa.in/ செய்து விண்ணப்பிக்கலாம். கட்டணம்: பொதுப் பிரிவினருக்கு ரூ.50, SC/ST பிரிவினருக்கு ரூ.2. மதிப்பெண் அடிப்படையில் இடங்கள் ஒதுக்கப்படும். ஷேர் பண்ணுங்க.
News May 7, 2025
வேலூர் மாவட்டத்தில் நாளை கபாடி போட்டி தொடக்கம்

வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாவட்ட அளவிலான கபாடி போட்டிகளை நாளை மே 2-ம் தேதி காலை 10 மணியளவில் வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி தொடங்கி வைக்கிறார். என மாவட்ட நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.