News January 19, 2025

வடமாநில குழந்தை தொழிலாளர்கள் 5 பேர் மீட்பு

image

திருப்பூர் லட்சுமி நகர் பகுதியில் பீகார் மாநிலத்தை சேர்ந்த ஒருவர் ஜிப் தயாரிப்பு நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார். வட மாநிலங்களில் இருந்து மூலப்பொருள் வாங்கப்பட்டு திருப்பூரில் தேவைப்படும் நிறங்களில் ஜிப் தயாரித்து அனுப்பிவருகின்றனர். நிறுவனத்தில் வடமாநிலத்தை சேர்ந்த 14 வயதுக்குட்பட்ட குழந்தை தொழிலாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டிருப்பதாக புகார் எழுந்தது. இதனடிப்படையில் நேற்று 5 பேர் மீட்கப்பட்டனர்.

Similar News

News March 12, 2026

திருப்பூரில் தேர்தல் தொடர்பான ஆய்வு கூட்டம்

image

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கலெக்டர் மனிஷ் தலைமையில் 2026 சட்டமன்றத் தேர்தல் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் ஊடகச் சான்றளிப்பு, பறக்கும் படை மற்றும் நிலைக் கண்காணிப்புக் குழுவினரின் செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மாநகர மற்றும் மாவட்ட போலீஸ் அதிகாரிகள், வருவாய்த்துறையினர் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

News March 12, 2026

திருப்பூர்: இரவு நேர ரோந்து போலீசார் விபரம்

image

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று (மார்ச்.11) இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். உடுமலைப்பேட்டை, தாராபுரம், பல்லடம், அவிநாசி, காங்கேயம் பகுதியில் உள்ள மக்கள் தங்கள் பகுதியில் குற்றம் நடைபெற்றால் உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தவும். அவசர உதவிக்கு 108ஐ அழைக்கவும்.

News March 11, 2026

திருப்பூர் மாநகரில் இரவு ரோந்து பணி விவரம்

image

திருப்பூர் மாநகரில் இன்று (மார்.11) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

error: Content is protected !!