News March 26, 2024
விருதுநகர் அருகே துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் பயன்படுத்தப்படும் வாக்கு பதிவு இயந்திரங்கள் அனைத்தும் திருநெல்வேலியில் இருந்து பாதுகாப்பாக கொண்டுவரப்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இன்று பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை சீல் வைக்கப்பட்டு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. அதுபோல துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Similar News
News February 19, 2026
விருதுநகர்: அ.தி.மு.க., 3-வது இடம்தான் – மாணிக்கம்தாகூர்

தமிழ்நாட்டின் நிலைமை தெரியாதது போல் அமித்ஷா நடிக்கலாம். ஆனால் சர்வே முடிவுகள் எல்லாம் அவர் மேஜையில்தான் இருக்கும் அல்லவா?. அதனால் தான் டெல்லி மேல்சபைக்கு காலியாகும் MP தேர்தலை தமிழகத்தில் முன்கூட்டிய நடத்த அவசரம் வந்துள்ளது. 2026-ல் அ.தி.மு.க., 3-ம் இடம் என்பது இப்போது அதிர்ச்சி செய்தி அல்ல பொதுவாக அரசியல் உண்மை ஆகி கொண்டிருக்கிறது என விருதுநகர் MP மாணிக்கம்தாகூர் தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.
News February 19, 2026
விருதுநகர்: தந்தையை வெட்டிக்கொன்ற மகன்

ஏழாயிரம்பண்ணை அருகே கரிசல்பட்டி கிராமத்தில் மணிகண்டன் (46) என்பவர் தனது மனைவி மகேஸ்வரி (40), 2 மகன்களுடன் வசித்து வருகிறார். நேற்று மது போதையில் மணிகண்டன் தனது மனைவி மகேஸ்வரியுடன் தகராறு செய்து அரிவாளால் அவரது கையில் வெட்டியுள்ளார். இதைக்கண்ட இவர்களது மகன் சுரேந்தர் (21) தந்தை மணிகண்டனிடம் அரிவாளை பறித்து அவரையே சரமாரியாக வெட்டி படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
News February 19, 2026
விருதுநகர்: தந்தையை வெட்டிக்கொன்ற மகன்

ஏழாயிரம்பண்ணை அருகே கரிசல்பட்டி கிராமத்தில் மணிகண்டன் (46) என்பவர் தனது மனைவி மகேஸ்வரி (40), 2 மகன்களுடன் வசித்து வருகிறார். நேற்று மது போதையில் மணிகண்டன் தனது மனைவி மகேஸ்வரியுடன் தகராறு செய்து அரிவாளால் அவரது கையில் வெட்டியுள்ளார். இதைக்கண்ட இவர்களது மகன் சுரேந்தர் (21) தந்தை மணிகண்டனிடம் அரிவாளை பறித்து அவரையே சரமாரியாக வெட்டி படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


