News January 18, 2025
புதுகை: கீரனூர், மண்டையூர், திருமயத்தில் மின்தடை

கீரனூர், மண்டையூர், திருமயம் உள்ளிட்ட துணை மின்நிலையங்களில் இன்று (ஜன.18) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதனால், இங்கிருந்து மின் வினியோகம் பெறும் கீரனூர் பரந்தாமன்நகர், நான்கு ரதவீதிகள், குன்றாண்டார்கோவில், தெம்மாவூர், அரசம்பட்டி, ஏனப்பட்டி உள்ளிட்ட பிற பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.
Similar News
News August 27, 2025
புதுக்கோட்டை: விநாயகர் சதுர்த்தியில் இத பண்ணுங்க..

➡️ நினைத்த காரியம் நிறைவேற விநாயகர் சதுர்த்தியில் செய்ய வேண்டியவை
➡️ வீட்டை சுத்தம் செய்து, விநாயகர் சிலையை நிறுவ வேண்டும்
➡️ பூ மாலைகளால் அலங்கரிக்க வேண்டும்
➡️ 108 முறை “ஓம் கம் கணபதியே நமஹ” என்ற மந்திரத்தை சொல்லி வழிபடலாம்
➡️ வழிபடும் நேரம்: காலை 07.45 – 08.45 மற்றும் காலை 10.40 – 01.10 வரை
➡️ அருகில் உள்ள விநாயகர் கோயிலுக்கும் சென்று வழிபடலாம்
➡️ இத்தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க
News August 27, 2025
புதுகையில் மானிய உரங்களை விற்பனை செய்தால் உரிமம் ரத்து

புதுகை மாவட்டத்தில் உர விற்பனையில் விதிகளை மீறினால் உரிமம் ரத்து செய்யப்படும் என வேளாண் இணை இயக்குநர் சங்கரலட்சுமி எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர் கூறியதாவது, “மானிய உரங்களை விற்பனை செய்யும்போது, விற்பனை முனையக்கருவி மூலம் மட்டுமே உரங்களை விற்பனை செய்ய வேண்டும். கூடுதல் விலைக்கு உரங்களை விற்பனை செய்யக்கூடாது. உரிமத்தை புதுப்பிக்காமல் உரங்களை விற்பனை செய்தால் நடவடிக்கை என்படும் என கூறியுள்ளார்.
News August 27, 2025
புதுக்கோட்டை: இரவு நேர ரோந்து காவலர்கள் விபரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (ஆக.,26) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய காவலர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் இரவு நேரத்தில் ஏதேனும் அசம்பாவிதம் நடைபெற்றால் இந்த எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.