News March 26, 2024
திருச்சியில் கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை.!

திருச்சியில் கடந்த 2019ம் ஆண்டு ஏர்போர்ட் பகுதியில் டிபன் கடை நடத்தி வந்த உமா சத்தியா என்பவர் சிவசண்முகம் என்பவரை தனது கடைக்கு வரக்கூடாது என்று சொன்னதால், ஆத்திரமடைந்த சிவசண்முகம் உமாவை கத்தியால் குத்தி படுகொலை செய்தார். இதுகுறித்த வழக்கு, இன்று திருச்சி 3வது கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்றது. விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் சிவசண்முகத்திற்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது.
Similar News
News September 19, 2025
திருச்சி: திட்ட முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு

திருச்சி மாவட்டத்தில் நாளை (செப்.19) உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் முசிறி ஒன்றியம் தா.பேட்டை லட்சுமி மஹாலிலும், மணிகண்டம் ஒன்றியம் அதவத்தூர் சமுதாயக்கூடத்திலும், புள்ளம்பாடி ஒன்றியம் டி.சங்கேந்தி சமுதாயக்கூடத்திலும், துறையூர் ஒன்றியம் முருகூர் பாலாஜி மஹாலிலும் நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு மனு அளிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News September 19, 2025
திருச்சி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

மத்திய அரசின் ஐஐடி, ஐஐஎம், ஐஐஐடி, என்ஐடி போன்ற கல்வி நிறுவனங்களில் பயிலும், திருச்சி மாவட்டத்தை சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகபிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர் இன மாணவ, மாணவிகள் நடப்பு நிதியாண்டிற்கான கல்வி உதவித் தொகை விண்ணப்பிக்க, திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நல அலுவலகத்தை தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
News September 19, 2025
தொட்டியத்தில் ஆட்டோ மீது பைக் மோதி விபத்து

தொட்டியம், பண்ணைவீடு பகுதியில் நேற்று மாலை 3 சக்கர ஆட்டோ இளநீா் ஏற்றிக்கொண்டு திரும்பிய போது, திருச்சியில் இருந்து நாமக்கல் நோக்கி பைக்கில் சென்றவர் ஆட்டோ மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் ஆட்டோவில் இருந்த 2 பேர் மற்றும் இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டு நாமக்கல் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து தொட்டியம் போலீசார் விசாரணை