News March 26, 2024
தேனி மாவட்ட மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

தேனி மாவட்டத்தில் விரைவில் பாராளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் உண்மைக்கு புறம்பான செய்திகள் பரப்பப்படும் நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பொதுமக்களோ அல்லது சம்பந்தப்பட்ட நபர்களோ 04546_261730 அல்லது 9363873078 என்ற தொலைபேசி எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிவபிரசாத் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 13, 2025
தேனி: இலவச தையல் மிஷின் பெற விண்ணப்பிக்கலாம்

பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு தேனி மாவட்ட சமூக நல அலுவலரை அணுகவும். எல்லோருக்கும் SHARE செய்யவும்
News December 13, 2025
விவசாய அடையாள அட்டை பதிவு செய்ய அறிவுறுத்தல்

தேனி மாவட்டத்தில் பிரதமரின் கவுரத்தொகை வழங்கும் திட்டத்தில் தற்போது 21வது தவணையில் 26,310 விவசாயிகள் பயனடைந்துள்ளனர். இவர்களில் 22,661 பேர் விவசாயிகளுக்கான அடையாள அட்டை பெற பதிவு செய்துள்ளனர். இதில் 3640 பேர் அடையாள அட்டை பதிவு செய்யாமல் உள்ளனர். பதிவு செய்யாவிட்டால் 22வது தவணை கவுரத்தொகை நிறுத்தி வைக்க வாய்ப்புள்ளது. எனவே விவசாயிகள் அடையாள அட்டை பெற விண்ணபிக்குமாறு வேளாண்துறையினர் அறிவுறுத்தல்.
News December 13, 2025
தேனியில் தொழிலாளியை மிரட்டிய இளைஞர் கைது

போடி ஜமீன்தோப்பு தெருவை சோ்ந்தவா் கௌதம். இவரை ஒரு வழக்கில் காட்டிக்கொடுத்ததாக அதே பகுதியை சோ்ந்த கூலித் தொழிலாளி பிரபாகரனை கல்லால் தாக்கியதாக காவல் நிலையத்தில் புகார் உள்ளது. இந்நிலையில் பிரபாகனிடம் புகாரை திரும்பபெற வலியுறுத்தியுள்ளார். மேலும் பிரபாகரன் சட்டை பையில் பணத்தை எடுத்ததோடு அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து போலீஸாா் கௌதம் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனா்.


