News March 26, 2024
ஈரோட்டில் 10 கைத்தறி பூங்காக்கள்

ஈரோடு மாவட்டத்தில் 10 இடங்களில் அரசு நிதி உதவியுடன், சிறிய அளவிலான கைத்தறி பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளது. இத்திட்டத்தில் 100 கைத்தறிகள் அமைத்து அதற்கு தேவையான அனைத்து வசதிகளும் தயார் படுத்தப்பட்டு வருகிறது. இதில் பயனடைய விரும்புவோர் www.loomworld.in என்ற இணையதளத்தில் வரும் மார்ச் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
Similar News
News April 30, 2025
ஈரோட்டில் கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் கைது

பெருந்துறை அருகே தோப்புப்பாளையத்தைச் சேர்ந்தவர் ரகு (29). தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவரிடம் ஒரு கும்பல் கத்தியைக் காட்டி மிரட்டி ரூ.20 ஆயிரத்தைப் பறித்துச் சென்றது. இந்த வழக்கில் ஏற்கனவே இருவர் கைது செய்யப்படுருந்தநிலையில் தலைமறைவாக இருந்த பால கண்ணன் (39) மற்றும் கல்லூரி மாணவரான கார்த்திகேயன் (20) ஆகிய இருவரையும் வீரப்பன்சத்திரம் போலீசார் நேற்று கைது செய்தனர்.
News April 29, 2025
ஈரோடு: இளம் பெண்ணுக்கு ஏற்பட்ட சோகம்

ஈரோடு, பெருந்துறை அடுத்துள்ள விஜயமங்கலம் ,அம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் கணேஷ் ராஜ் இவரது மனைவி ஜானகி வயது 30, இவருக்கு 5 வயதில் ஆண் குழந்தை உள்ளது. கணேஷ் ராஜ் மில் வேலை பார்க்கிறார். நேற்று இரவு வழக்கம் போல் வேலைக்குச் சென்றவர் திரும்பி நள்ளிரவு வந்த பொழுது அவரது மனைவி ஜானகி தலையில் ரத்த காயத்துடன் இறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை.
News April 29, 2025
ஈரோடு மாநகராட்சி மாமன்ற சாதாரண கூட்டம்

ஈரோடு மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக்கூட்டம் நாளை 30.04.2025 ஆம் தேதி புதன்கிழமை முற்பகல் 11.00 மணியளவில் ஈரோடு மாநகராட்சி மாமன்ற கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.இக்கூட்டத்திற்கு ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம் தலைமையில் துணை மேயர் செல்வராஜ், ஆணையாளர் பொறுப்பு தனலட்சுமி முன்னிலையில் நடைபெற உள்ள கூட்டத்தொடரில் கவுன்சிலர்கள், அதிகாரிகள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுமாறு மேயர் தெரிவித்துள்ளார்.