News March 26, 2024
எம்.பி செய்த பணிகளை பட்டியலிட்டால் பரிசு

திருப்பூர் பாராளுமன்ற தொகுதியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த சுப்பராயன் மீண்டும் போட்டியிடுகிறார். இந்நிலையில், “இவர் திருப்பூர் தொகுதிக்கு செய்த பணிகளை பட்டியலிட்டு கூறினால் ரூ.1கோடி பரிசு வழங்கப்படும்” என்ற போஸ்டர் மண்ணின் மைந்தர்கள் கூட்டமைப்பு சார்பில் தொகுதியின் பல இடங்களில் ஒட்டப்பட்டுள்ளது. இதனால் பல இடங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Similar News
News October 28, 2025
திருப்பூர் இரவு நேர ரோந்து காவலர்களின் விவரம்!

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். உடுமலைப்பேட்டை, பல்லடம், அவிநாசி, தாராபுரம், காங்கேயம், ஆகிய பகுதிகளில் உள்ள மக்கள் தங்கள் பகுதியில் ஏதேனும் குற்றம் நடைபெற்றால் உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தவும் அவசர உதவிக்கு 108 அழைக்கவும்!
News October 28, 2025
திருப்பூர்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

திருப்பூர் மாவட்டத்தில் இன்று (27.10.2025) இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் என மாவட்ட காவல்துறையினர் அறிவித்துள்ளனர். காங்கேயம், உடுமலை, தாராபுரம், பல்லடம், அவினாசி ஆகிய பகுதிகளில் உள்ள காவல்துறையினரின் இரவு ரோந்துப பணி விபரம் மாவட்ட காவல்துறையினரால் வெளியிடப்பட்டுள்ளது.
News October 27, 2025
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் 315 மனுக்கள்!

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று மாவட்ட கலெக்டர் மணிஷ் தலைமையில் நடைபெற்றது. இதில் திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் இலவச வீட்டு மனை பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 315 மனுக்களை அளித்திருப்பதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


