News March 26, 2024
பைக் விபத்தில் அரசு பஸ் கண்டக்டர் பலி

கே.வி.குப்பம் அடுத்த முருக்கம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பிரபு (45), அரசு பஸ் கண்டக்டர். இவர் கடந்த 20 ஆம் தேதி இரவு தனது பைக்கில் பெருமாங்குப்பம் அருகே வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோர கால்வாய்க்குள் பாய்ந்தார். இதில் படுகாயம்டைந்த பிரபுவை அப்பகுதி மக்கள் மீட்டு வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
Similar News
News February 18, 2026
வேலூரில் 250 கோழிகள் இலவசம்!

வேலூர் மக்களே.. தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் நாட்டு கோழி பண்ணை அமைக்க மானியம் வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், நாட்டுக் கோழி வளர்ப்புப் பண்ணை அமைக்க மொத்த செலவில் 50% மானியம், 250 கோழிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. விருப்புள்ள நபர்கள், அருகில் இருக்கும் கால்நடை மருத்துவமனை அல்லது கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!
News February 18, 2026
வேலூரில் EB பில் எகிறுதா..?

வேலூர் மக்களே உங்க கரண்ட் பில் அதிகமா வருதா..?<
News February 18, 2026
வேலூரில் விஜய் மக்கள் சந்திப்பு கூட்டம்; எஸ்.பி ஆய்வு

வேலூரில் தவெக தலைவா் விஜய்யின் மக்கள் சந்திப்பு கூட்டம் அகரம்சேரியில் வரும் திங்கள்கிழமை (பிப்.23) நடைபெற உள்ளது. இதையொட்டி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.யு.சிவராமன் நேற்று (பிப்.17) கூட்டம் நடைபெற உள்ள மைதானத்தில் ஆய்வு மேற்கொண்டாா். சேலத்தைத் தொடா்ந்து, தற்போது வேலூரின் அகரம்சேரியில் தவெக தலைவா் விஜயின் மக்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற உள்ளது பெரும் எதிர்பார்ப்பதை ஏற்படுத்தி உள்ளது.


