News March 26, 2024

திருச்சி எஸ்.பி-யின் முக்கிய அறிக்கை

image

தமிழ்நாட்டில் வருகின்ற 19.4.2024 நடைபெற உள்ள பாராளுமன்ற பொது தேர்தல் பணிக்காக முன்னாள் ராணுவ வீரர்கள், முன்னாள் காவல்துறையினர், முன்னாள் தீயணைப்பு துறையினர், முன்னாள் சிறை துறையினர் ஆகியோர் வருகின்ற 17/4/2024 முதல் 19/4/2024 வரை 3 நாட்கள் தேர்தல் பணியாற்ற விரும்புவோர், தங்கள் அருகாமையில் உள்ள காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு விருப்பத்தினை தெரிவிக்க திருச்சி மாவட்ட எஸ்பி இன்று தெரிவித்துள்ளார்.

Similar News

News September 19, 2025

திருச்சி: திட்ட முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு

image

திருச்சி மாவட்டத்தில் நாளை (செப்.19) உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் முசிறி ஒன்றியம் தா.பேட்டை லட்சுமி மஹாலிலும், மணிகண்டம் ஒன்றியம் அதவத்தூர் சமுதாயக்கூடத்திலும், புள்ளம்பாடி ஒன்றியம் டி.சங்கேந்தி சமுதாயக்கூடத்திலும், துறையூர் ஒன்றியம் முருகூர் பாலாஜி மஹாலிலும் நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு மனு அளிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News September 19, 2025

திருச்சி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

மத்திய அரசின் ஐஐடி, ஐஐஎம், ஐஐஐடி, என்ஐடி போன்ற கல்வி நிறுவனங்களில் பயிலும், திருச்சி மாவட்டத்தை சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகபிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர் இன மாணவ, மாணவிகள் நடப்பு நிதியாண்டிற்கான கல்வி உதவித் தொகை விண்ணப்பிக்க, திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நல அலுவலகத்தை தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

News September 19, 2025

தொட்டியத்தில் ஆட்டோ மீது பைக் மோதி விபத்து

image

தொட்டியம், பண்ணைவீடு பகுதியில் நேற்று மாலை 3 சக்கர ஆட்டோ இளநீா் ஏற்றிக்கொண்டு திரும்பிய போது, திருச்சியில் இருந்து நாமக்கல் நோக்கி பைக்கில் சென்றவர் ஆட்டோ மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் ஆட்டோவில் இருந்த 2 பேர் மற்றும் இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டு நாமக்கல் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து தொட்டியம் போலீசார் விசாரணை

error: Content is protected !!