News January 16, 2025

காணும் பொங்கல்: 17,000 காவலர்கள் பாதுகாப்பு

image

நண்பர்கள், உறவுகளை ஒருங்கிணைக்கும் நாளாக பார்க்கப்படும் காணும் பொங்கலான இன்று (ஜன.16), சென்னையில் மெரினா கடற்கரை, பூங்கா உள்ளிட்ட பொது இடங்களில் மக்கள் அதிகம் கூடுவார்கள். இதையொட்டி, சென்னையில் 17,500 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், மெரினா கடற்கரையில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

Similar News

News August 25, 2025

சென்னை: ரூ.48,000 சம்பளத்தில் வங்கி வேலை

image

பொதுத்துறை வங்கியான பஞ்சாப் & சிந்து வங்கியில் காலியாக உள்ள உள்ளுர் வங்கி அதிகாரிகள் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளமாக ரூ.48,000 முதல் ரூ.85,000 வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க <>இங்கு<<>> கிளிச் செய்யவும். செப்.7-ம் தேதி கடைசி ஆகும். நல்ல சம்பளத்தில் வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க.

News August 25, 2025

சென்னை: What’s App இருக்கா! உஷார்

image

வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த போக்குவரத்து காவலர் சுரேஷ்குமார். இவருக்கு What’s App-ல் மெசேஜ் ஒன்று வந்தது. அது பைல் வடிவில் இருந்ததால், அதை அவர் கிளிக் செய்தார். இதனையடுத்து அவரது வங்கிக்கணக்கில் இருந்து ரூ.1.20 லட்சம் எடுக்கப்பட்டதாக SMS வந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து யுபிஐ பயனர்களை குறிவைத்து பணமோசடி நடந்து வருவதால் கவனமாக இருக்க சைபர் க்ரைம் எச்சரிக்கை விடுத்துள்ளது. (SHARE)

News August 25, 2025

சென்னையில் 41,000க்கும் மேற்பட்ட தெருவிளக்குகள் செயலிழப்பு

image

சென்னை மாநகராட்சி ஆய்வில் 41,000க்கும் மேற்பட்ட தெருவிளக்குகள் இயங்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு பிராந்தியத்தில் (மண்டலம் 1–5) 10,937, மத்திய பிராந்தியத்தில் (6–10) 19,816, தெற்கு பிராந்தியத்தில் (11–15) 9,935 விளக்குகள் பழுதடைந்துள்ளன. குறிப்பாக கிண்டி, கோட்டூர்புரம், எக்காட்டுத்தாங்கல், மவுண்ட் ரோடு, பாரதிநகர் பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தரவுகள் கூறுகின்றன.

error: Content is protected !!