News March 26, 2024
ரயில் டிக்கெட் முன்பதிவில் அதிகரிக்கும் முறைகேடு

கோடை விடுமுறையை குறிவைத்து முறைகேடாக முன்பதிவு செய்து விற்று வரும் நபர்களை ஆர்.பி.எஃப் தனிப்படை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை தொடங்கும் நிலையில், முக்கிய வழித்தடங்களில் இயங்கும் ரயில்களில் முன்பதிவு முடிவடைந்துள்ளது. இதனை சாதகமாக பயன்படுத்தி சில கணினி மைய ஊழியர்கள், ரயில் டிக்கெட்டுகளை புக்கிங் செய்து அதிக விலைக்கு விற்பதாக புகார் எழுந்துள்ளது.
Similar News
News November 5, 2025
புதிய அங்கன்வாடி கட்டிடம் திறந்து வைத்த எம்.எல்.ஏ

சீர்காழி ஊராட்சி ஒன்றியம் விளந்திட சமுத்திரம் ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ. 15 லட்சம் மதிப்பீட்டில் பகுதி நேர அங்காடி கட்டிடம் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது. சீர்காழி எம்எல்ஏ பன்னீர்செல்வம் அங்கன்வாடி கட்டிடத்தை திறந்து வைத்து பொதுமக்களுக்கு குடிமைப் பொருட்கள் வழங்கி தொடங்கி வைத்தார். திமுக நிர்வாகிகள் பலர் நிகழ்வில் பங்கேற்றனர்.
News November 5, 2025
பொதுத்தேர்வுக்காக 2 – 5 நாள்கள் வரை விடுமுறை

2025 – 26 கல்வி ஆண்டிற்கான <<18193947>>10<<>>, <<18194621>>12-ம் வகுப்பு<<>> பொதுத்தேர்வு அட்டவணை நேற்று வெளியானது. அதில், ஒவ்வொரு தேர்வுக்கும் 2 – 5 நாள்கள் விடுமுறை கிடைத்துள்ளதால் மாணவர்கள், பெற்றோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குறிப்பாக, ஒவ்வொரு தேர்வுக்கும் இடையேயான இந்த இடைவெளி என்பது மாணவர்கள் சிரமமின்றி படிக்கவும், மன அழுத்தமின்றி தேர்வு எழுதவும் உதவும் என உளவியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
News November 5, 2025
மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி?

‘Thug Life’ படத்திற்கு பிறகு, அடுத்த பட வேலையில் மணிரத்னம் தீவிரம் காட்டி வருகிறார். முன்னதாக, அவர் ருக்மணி வசந்தை வைத்து காதல் படம் ஒன்றை இயக்கப்போகிறார் எனக் கூறப்பட்டது. அப்படத்தில் தற்போது விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்க உள்ளார் எனக் கூறப்படுகிறது. ஏற்கெனவே, மணிரத்னம் இயக்கத்தில் ‘செக்க சிவந்த வானம்’படத்தில் விஜய் சேதுபதி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த காம்போ ஹிட்டடிக்குமா?


