News January 15, 2025

கோவளத்தில் ஹெலிகாப்டர் தளத்திற்கு சீல் வைத்த அதிகாரிகள்

image

கோவளத்தில் அண்மையில் தனியார் ஹெலிகாப்டர் மூலம் சுற்றுலா சவாரி தொடங்கப்பட்டது. இந்நிலையில் இந்த ஹெலிகாப்டர் சவாரி நடத்துவதற்கு அந்த நிறுவனம் முறையாக மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெறவில்லை என திருப்போரூர் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ் எஸ் பாலாஜி புகார் தெரிவித்திருந்தார். இந்நிலையில் திருப்போரூர் வட்டாட்சியர் நடராஜ் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்த உரிய ஆவணங்கள் இல்லாததால் சீல் வைக்கப்பட்டது.

Similar News

News August 4, 2025

செங்கல்பட்டு மக்களே நம்பர் நோட் பண்ணிக்கோங்க

image

செங்கல்பட்டு மாவட்டம் இன்று (ஆகஸ்ட் 04) செங்கல்பட்டு மாமல்லபுரம் மதுராந்தகம் ஆகிய பகுதிகளில் இன்று இரவு ரோந்து பணி செய்யும் காவலர்கள் விவரம் கீழே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடுவார் பொதுமக்கள் ஏதேனும் அவசர தேவை என்றால் இந்த தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளவும். இரவு பணி செய்யும் பெண்களுக்கு இந்த செய்தியை ஷேர் செய்யுங்கள்.

News August 4, 2025

செங்கல்பட்டு இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 04) இரவு ரோந்து பணிக்கு DSP தலைமையில் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். செங்கல்பட்டு, மாமல்லபுரம், மதுராந்தகம் வட்டங்களில் உள்ள ஒன்பது காவல் நிலையங்களில் பாதுகாப்பு நடவடிக்கையாக அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். மாவட்டத்தின் பொது மக்கள் பாதுகாப்புக்காக காவல் துறை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. ஷேர் பண்ணுங்க!

News August 4, 2025

செங்கல்பட்டில் தீய சக்திகளில் இருந்து காக்கும் சேப்பாட்டி அம்மன்

image

செங்கல்பட்டு பெரிய நத்தம் பகுதியில் அமைந்துள்ளது சேப்பாட்டி அம்மன் கோயில். இந்தக் கோயில் சுற்றுவட்டார கிராம மக்களுக்குக் காவல் தெய்வமாக வணங்கப்படுகிறது. இங்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் தேர்த்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. நோய்களிலிருந்தும், தீய சக்திகளிலிருந்தும் தங்களை பாதுகாத்து கொள்ள பக்தர்கள் இங்கு வந்து வேண்டுகின்றனர். நிகழும் ஆடி மாதத்தில் ஒரு முறை சென்று வாருங்கள். ஷேர்!

error: Content is protected !!