News January 14, 2025
சுருக்குமடி வலைக்கு தடை -மீன்வளத்துறை எச்சரிக்கை

புதுச்சேரி மீன்வளத்துறை இயக்குனர் முகமது இஸ்மாயில் நேற்று வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் புதுச்சேரி கடல் பகுதிகளில் ஹூக்கான் (எ) அக்டி முறை (சுருக்குமடி வலை) மீன்பிடி முறையை பயன்படுத்த கூடாதுஎன எச்சரிக்கை விடப்படுகிறது. மீறினால், மீனவர்களின் நலத்திட்ட உதவிகள் நிருத்தப்படும். மேலும் அவர்கள் மீது மீன்பிடி ஒழுங்கு முறை சட்டம் 2008ன் படி நடவடிக்கை எடுப்பதோடு, மீன்பிடி உபகரணங்கள் பறிமுதல் செய்யப்படும்
Similar News
News December 8, 2025
புதுச்சேரி: ரூ.69,100 சம்பளத்தில் வேலை

மத்திய பணியாளர் தேர்வாணையம் (SSC), 2026-ஆம் ஆண்டிற்கான கான்ஸ்டபிள் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 25487
3. வயது: 18-23 (SC/ST-28,OBC-26)
4. மாதச்சம்பளம்: ரூ.21,700 – ரூ.69,100
5. கல்வித் தகுதி: 10-ம் வகுப்பு
6.கடைசி தேதி: 31.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
8. மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க
News December 8, 2025
காரைக்கால்: கிளினிக்கில் பணத்தை திருடியவர் கைது

காரைக்கால் ரயில் நிலையம் அருகே, டாக்டர் வனிதா என்பவர் தனியார் கிளினிக் நடத்தி வருகிறார். இவர், தனது குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தார். இந்நிலையில், கிளினிக் கதவை உடைக்கப்பட்டு, ரூ.3 லட்சம் பணம் மற்றும் மொபைல் போன் திருடப்பட்டிருந்தது. புகார் படி போலீசார் அரியலுார் மாவட்டத்தை சேர்ந்த ஸ்டீபன் ராஜ், என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
News December 8, 2025
புதுவை: கார் மீது லாரி மோதி விபத்து

திண்டிவனத்தில் இருந்து, கடலூர் நோக்கி கார் ஒன்று நேற்று சென்று கொண்டிருந்தது. புதுவை இந்திராகாந்தி சிக்னல் அருகே வந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப் பாட்டை இழந்த கார் தடுப்பு சுவரில் மோதியது. அதே நேரத்தில் பின்னால் வந்த லாரி ஒன்று கார் மீது மோதியது. இந்த விபத்தில் காரில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர். இது குறித்து கோரிமேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர்.


