News January 13, 2025
நீலகிரியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு, பொதுமக்களிடமிருந்து அடிப்படை வசதிகள் மற்றும் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 56 மனுக்களை பெற்றுக் கொண்டார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன் உட்பட பலர் இருந்தனர்.
Similar News
News November 15, 2025
குன்னூர் மக்களே: கவனமா இருங்க!

குன்னுார்- மேட்டுப்பாளையம் மலை பாதையோரங்களில், 3மாதங்களுக்கு பிறகு யானை கூட்டம் தற்போது மீண்டும் பர்லியார் பகுதிக்கு வர துவங்கியுள்ளன. நேற்று காலை, 7மணியளவில், பார்லியார் அருகே சாலை ஓரத்தில் 2குட்டிகளுடன், 6 காட்டு யானைகள் முகாமிட்டிருந்தன. இவை பர்லியார் குடியிருப்பு மற்றும் மலைப் பாதையில் உலாவரும் என்பதால் மக்கள அச்சத்தில் உள்ளனர். மித வேகத்தில் வாகனங்களை இயக்க வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
News November 15, 2025
நீலகிரி: காவல் அதிகாரிகளின் இரவு ரோந்து பணி விபரம்!

நீலகிரி மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் உதகை நகரம் ஊரக உட்கோட்டம், குன்னூர் உட்கோட்டம், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் ஆகிய காவல் நிலைய அதிகாரிகளின் தொடர்பு எண்கள் நீலகிரி மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளது.
News November 14, 2025
நீலகிரி: கேன் தண்ணீர் பயன்படுத்துபவர்கள் கவனத்திற்கு!

நீலகிரி மாவட்டத்தில் கேன் தண்ணீர் தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்து வருகின்றன. கேன் தண்ணீர் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை. குடிநீர் கேன்களில், பிளாஸ்டிக் தரம், கேன்களின் சுத்தம், உற்பத்தி மற்றும் காலாவதி தேதி, BIS மற்றும் FSSAI முத்திரைகள் ஆகியவற்றை சரிபார்க்க வேண்டும். ஒரு கேனை 30 முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கேன்களின் நிறம் மாறினால் பயன்படுத்த கூடாது. ஷேர் பண்ணுங்க.


