News March 26, 2024

கொலை குற்றவாளிகளை பிடிக்க 2தனிப்படை

image

திருச்சியை அடுத்த ஜீயபுரத்தை சேர்ந்த வீரபத்திரன். இவர் நேற்று முன்தினம் பேரூர் பஸ் நிலையம் அருகே நின்றிருந்தபோது மர்ம நபர்கள் வெட்டி கொலை செய்து விட்டு தப்பியோடினர். இதையடுத்து நேற்று மாலை வீரபத்திரன் உடல் உடற்கூராய்வு முடிந்த பிறகு அவர்களது உறவினரிடம் ஒப்படைத்தனர். பின்னர் ஜீயபுரம் போலிசார் வழக்கு பதிந்து 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News

News February 3, 2026

திருச்சி: பாதி வழியில் பெட்ரோல் காலியா ?

image

உங்களது டூவீலர் / காரில் நீங்கள் சென்று கொண்டிருக்கும் போது, பாதி வழியில் திடீரென பெட்ரோல் தீர்ந்து நிற்பதை விட கொடுமையான விஷயம் வேறேதுமில்லை. இதுபோன்ற சூழலில் நீங்கள் சிக்கிக் கொண்டால், பதட்டப்படாமல், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் <>’Fuel@Call<<>>’ என்ற ஆப்பின் மூலம், ஆன்லைன் வழியாக பெட்ரோல்/டீசல் ஆர்டர் செய்யலாம். நீங்கள் இருக்கும் இடத்திற்கே நேரில் வந்து எரிப்பொருள் டெலிவரி செய்யப்படும். ஷேர் பண்ணுங்க!

News February 3, 2026

திருச்சி: 70% மானியத்தில் பம்புசெட் வேண்டுமா?

image

தமிழக அரசு விவசாயிகளுக்கு 70% மானியத்தில் சூரியநில அரசும், 30% மத்திய அரசும் வழங்குகிறது. இதற்கு உழவன் App மூலமாக விண்ணப்பித்து, பெயரை ஒளியில் இயங்கும் பம்புசெட்டுகளை வழங்கி வருகிறது. இந்த 70 சதவீதத்தில், 40 % முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் அறிய உங்கள் மாவட்ட வேளாண் பொறியியல் துறை அலுவலகத்தை அணுகவும். பிறரும் பயன்பெற SHARE செய்து உதவுங்கள்.

News February 3, 2026

திருச்சி – பாலக்காடு டவுன் விரைவு ரயில் ரத்து

image

பொறியியல் பணிகள் காரணமாக திருச்சி – பாலக்காடு டவுன் விரைவு ரயில் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இது குறித்து ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருச்சி – பாலக்காடு டவுன் விரைவு ரயிலானது வரும் பிப்.6, 8, 10 ஆகிய தேதிகளில் ஊத்துக்குளி – பாலக்காடு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் திருச்சியில் இருந்து ஊத்துக்குளி வரை மட்டுமே இயக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!