News January 13, 2025
மாநகர காவல் இரவு ரோந்து பணி விவரம்

சேலம் மாநகரில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் இருக்கவும் அசம்பாவிதங்களை தவிரவும் மாநகர காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கப்பட்டு வருகிறது அதன்படி மாநகர காவல் துறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அந்தந்த காவல் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு இரவு ரோந்து பணி ஈடுபட்டு வருகின்றனர். ஜனவரி 13 இரவு அதிகாரிகள் விவரம் வெளியிடப்பட்டது.
Similar News
News September 9, 2025
வந்தே பாரத் ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு!

நவராத்திரி, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரயில் பயணிகளின் வசதிக்காக சேலம் வழியாக இயக்கப்படும் மதுரை-பெங்களூரூ கண்டோன்மென்ட்-மதுரை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் உள்ள பெட்டிகளின் எண்ணிக்கை இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. அதாவது, தற்போது 8 பெட்டிகள் கொண்டிருந்த நிலையில் 16 பெட்டிகளாக மாற்றப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறை வரும் செப்.11- ல் அமலுக்கு வரும் என்று சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.
News September 9, 2025
சேலத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும். மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக சேலம் மாவட்டத்தில் இன்று (செப்.09) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சேலத்தில் நேற்றிரவு பரவலாக மழை பெய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
News September 9, 2025
33 நாட்கள் 198 முகாம்கள் 1,84,777 மனுக்கள்

சேலம் மாவட்டத்தில் கடந்த மாதம் 15ஆம் தேதி உங்கள் வீடு தேடி வரும் அரசு என்றும் திட்டத்தின் கீழ், உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்று வருகிறது. இந்த முகாமில் அந்தந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்களிடம் குறைகள் மனுக்களை கேட்டறிந்து தீர்வுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி 33 நாட்களில் 1098 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. இவற்றின் வாயிலாக மொத்தம் 1,84,777 மனுக்கள் பெரப்பட்டுள்ளது.