News January 13, 2025

பொது நிவாரண நிதிக்கான காசோலை வழங்கிய கலெக்டர்

image

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அஸ்தினாபுரம் கிராமத்தை சேர்ந்த கலியபெருமாள் என்பவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததை தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து 1 லட்சம் ரூபாய்க்கான காசோலையினை உயிரிழந்தவரின் மனைவியிடம் மாவட்ட ஆட்சித் தலைவர் ரத்தினசாமி இன்று வழங்கினார். இதில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பரிமளம் உடன் இருந்தார்.

Similar News

News December 8, 2025

அரியலூர்: பெரியார் விருது பெற விண்ணப்பிக்கலாம்

image

அரியலூர் மாவட்டத்தில், சமூக நீதிக்காக பாடுபடுபவர்களுக்கு ‘சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது’ வழங்கப்பட உள்ளது. இந்த விருதின் கீழ் ரூ.5 லட்சம் ரொக்கம், ஒரு பவுன் பதக்கம் மற்றும் தகுதியுரை வழங்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். தகுதியுள்ளவர்கள் தங்கள் விண்ணப்பம் மற்றும் சமூக நீதிப் பணிகளின் ஆவணங்களுடன் வரும் டிசம்பர் 18ஆம் தேதிக்குள் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பிவைக்க வேண்டும்.

News December 8, 2025

அரியலூர்: மாடு வாங்க ரூ.1.2 லட்சம் கடன் உதவி

image

தமிழக அரசின் TABCEDCO மூலம் ஒரு பயனாளிக்கு, 2 கறவை மாடுகள் வாங்க ரூ.1,20,000 கடனுதவி வழங்கப்படுகிறது. இந்த கடனை திருப்பி செலுத்த 3 ஆண்டுகள் கால அவகாசமும் உண்டு. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் tabcedco.net என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். குறிப்பு: கடனுதவி பெற மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!

News December 8, 2025

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

image

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (8.10.2025) மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி தலைமையில் “மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகின்றது. இதில் முதியோர் உதவித் தொகை, இல்ல வசதி, வீட்டு மனைபட்டா, பல்வேறு மனுக்கள் பொதுமக்கள் தங்களுடைய குறைகளை மனுவாக கொடுத்து பயன்படுத்தினார் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

error: Content is protected !!