News January 13, 2025

திண்டுக்கல்லில் பாதுகாப்பு அதிகரிப்பு

image

பழனி முருகன் கோவிலுக்கு பாதயாத்திரை பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. இங்கு வரும் பக்தர்கள் சண்முக நதி, இடும்பன் குளம் பகுதியில் குளித்து நீராடிய பின் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வார்கள். இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீர் நிலைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. 

Similar News

News December 8, 2025

திண்டுக்கல்லில் பேருந்து மோதி மூதாட்டி பலி!

image

திண்டுக்கல் மாவட்டம் நாகல் நகர் ரவுண்டானா பகுதியில் சாலையை கடக்க நின்று கொண்டு இருந்த மூதாட்டி மீது வழியாக வந்த தனியார் பேருந்து எதிர்பாராத விதமாக திடீரென மோதியது. இந்த விபத்தில் மூதாட்டி சம்பவ இடத்திலேயே பலியானார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News December 8, 2025

திண்டுக்கல்லில் வேலை வேண்டுமா?

image

தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற டிச.13 அன்று ஒட்டன்சத்திரம் கிறித்துவப் பாலிடெக்னிக் கல்லூரியில் நடத்தப்படவுள்ளது. இதில் 3000-க்கும் மேற்பட்டடோர் தேர்வு செய்யப்படவுள்ளனர். 8ஆம் வகுப்பு முதல் பட்டயப்படிப்பு வரை அனைவரும் கலந்து கொள்ளலாம். தங்களின் கல்விச்சான்று,ஆதார் அட்டை,சுய விவரக் குறிப்பு, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஆகியவற்றின் நகல்களுடன் பங்கேற்கலாம். ஷேர் பண்ணுங்க!

News December 8, 2025

திண்டுக்கல்: ஆதார் கார்டில்மாற்றம்.. FREE

image

திண்டுக்கல் மக்களே ஆதார் கார்டில் இனி நீங்களே உங்களது முகவரியை அப்டேட் செய்யலாம்

1.<>இங்கே கிளிக் செய்து<<>>, ஆதார் எண்ணை பதிவிட்டு Login செய்யவும்

2.அப்டேட் பகுதியில் ‘ADDRESS UPDATE’ என தேர்ந்தெடுங்க

3.அதில், உங்களது புதிய முகவரியை பதிவிடவும்

4.முகவரிக்கான ஆதாரங்களை பதிவேற்றம் செய்யவும்

5.புதிய முகவரியை அப்டேட் செய்ய ஜூன் 2026 வரை இலவசம். எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் உடனே SHARE பண்ணுங்க

error: Content is protected !!