News March 26, 2024

மதுரை – எச்சரிக்கும் காவல்துறை

image

மதுரை நத்தம் தேசிய நெடுஞ்சாலையில் புதியதாக கட்டப்பட்டு போக்குவரத்திற்காக திறந்து விடப்பட்ட நத்தம் பறக்கும் பாலத்தில் தொடர்ந்து விபத்துகள் நடந்த வண்ணம் இருந்து சில மாதங்களுக்கு முன் இரு சக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்து இருவர் இறந்த சோகமும் நடந்துள்ளதை அடுத்து வாகன ஓட்டிகளை எச்சரிக்கும் விதமாக போக்குவரத்து காவல்துறை மூலம் விபத்து நடக்கும் இடத்தில் எச்சரிக்கை பலகையும் வைக்கப்பட்டுள்ளது..

Similar News

News November 16, 2025

மதுரை: சிறுமி கர்ப்பம்; வாலிபர் மீது போக்சோ

image

விளாச்­சேரியை சேர்ந்­த­ ரஞ்­சித்குமார்(27) மதுரை கொசவபட்­டியில் உள்ள குலதெய்­வம் கோயிலில், 17 வயது சிறுமியை திரும­ணம் செய்து கொண்­டார். இதனால் சிறுமி 5 மாத கர்ப்­பமா­னார். இதை அறிந்த மகளிர் ஊர் நல அலுவலர் பத்­மா இது குறித்து திருப்­பரங்குன்­றம் அனைத்து மகளிர் காவல் நிலை­யத்தில் புகார் செய்­தார். போலீசார் ரஞ்­சித்குமார் மீது போக்சோ சட்­டத்தில் இன்று வழக்கு பதிவு செய்து விசா­ரிக்கின்றனர்.

News November 16, 2025

மதுரை: 1,429 காலியிடங்கள்.. ரூ.71,900 வரை சம்பளம்

image

மதுரை மக்களே, தமிழ்நாடு சுகாதாரத்துறையில் (TN MRB) காலியாக உள்ள Health Inspector Grade-II பணிகளுக்கு 1429 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பள்ளியில் தமிழை ஒரு படமாக பயின்று தகுதியான படிப்பை முடித்தவர்கள் நவ. 16 (இன்று)-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். சம்பளம் – ரூ.19,500 – ரூ.71,900. மேலும் விவரங்கள் அறிய, விண்ணப்பிக்க இங்கு <>கிளிக் <<>>செய்யவும். இத்தகவலை எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் உடனே SHARE பண்ணுங்க.

News November 16, 2025

மதுரை: மனைவியுடன் தகராறு… உயிரை மாய்த்த தொழிலாளி

image

உத்­த­ரப்­பி­ர­தேச மாநி­லத்தை சேர்ந்­த­வர் சாம்பி­ரவேஷ் மகன் திவாகர்(37). இவர் கடச்­ச­நேந்­த­லில் தங்கி இருந்து பெயிண்டிங் வேலை பார்த்து வந்­தார். மனைவியு­டன் ஏற்­பட்ட கருத்து வேறு­பாடு கார­ண­மாக மன­மு­டைந்து பெயிண்­டில் கலக்கும் டர்­பைண்­டன் ஆயிலை உட­லில் ஊற்றி தீ வைத்து கொண்­டார். மருத்து­வம­னையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்­தார். கோ.புதூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!