News March 26, 2024

மதுரை – எச்சரிக்கும் காவல்துறை

image

மதுரை நத்தம் தேசிய நெடுஞ்சாலையில் புதியதாக கட்டப்பட்டு போக்குவரத்திற்காக திறந்து விடப்பட்ட நத்தம் பறக்கும் பாலத்தில் தொடர்ந்து விபத்துகள் நடந்த வண்ணம் இருந்து சில மாதங்களுக்கு முன் இரு சக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்து இருவர் இறந்த சோகமும் நடந்துள்ளதை அடுத்து வாகன ஓட்டிகளை எச்சரிக்கும் விதமாக போக்குவரத்து காவல்துறை மூலம் விபத்து நடக்கும் இடத்தில் எச்சரிக்கை பலகையும் வைக்கப்பட்டுள்ளது..

Similar News

News February 13, 2026

மதுரை: பெண் தூக்கிட்டு தற்கொலை செய்த சோகம்

image

உசிலம்பட்டி அருகே மலைப்பட்டியை சேர்ந்தவர் ரவிக்குமார் மனைவி செல்வராணி (40). ரவிக்குமார் ராஜஸ்தானில் தோசை கடை வைத்துள்ளார். செல்வராணி தனது இரு மகன்களுடன் வசித்து வந்துள்ளார். உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அதற்கு இவர் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இவர் நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உசிலம்பட்டி போலீசார் சந்தேக மரணமாக வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

News February 13, 2026

மதுரை: மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை

image

மேலூர் கஸ்தூரிபாய் நகரை சேர்ந்தவர் கண்ணன் மகன் சந்திரமோகன்(32). இவர் சிவா மாருதி கார் ஷோ ரூமில் வேலை பார்த்து வந்தார். கடந்த ஒரு வாரமாக இவர் வேலைக்கு செல்லாமல் இருக்கவே, மனைவி சிந்து அதை கண்டித்துள்ளார். இந் நிலையில் வெளியே சென்ற சந்திரமோகன் இரவு தாமதமாக வீட்டிற்கு வந்து தனது அறைக்கு சென்று நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மேலூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

News February 13, 2026

மதுரை : உங்களுக்கு ரூ. 5000 வரலையா ? – Apply லிங்க் !

image

மதுரை மக்களே, கலைஞர் உரிமை தொகை (பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் = ரூ.3000) + கோடை நிதி ரூ.2000 என மொத்தம் ரூ.5000 இன்று தமிழக அரசு வழங்கி உள்ளது. உங்களுக்கு ரூ. 5000 வரலையா? இங்கு <>க்ளிக்<<>> செய்து உங்க பெயர், ரேஷன் எண், குடும்ப தலைவர் பெயர் பதிவிட்டு, ஆதார் கார்டு, ரேஷன் கார்டு ஆவணங்களை பதிவேற்றம் செய்து மேல்முறையீடு பண்ணுங்க. 30 நாளில் நல்ல தீர்வு கிடைக்கும். இது எல்லாருக்கும் தெரிய SHARE பண்ணுங்க!

error: Content is protected !!