News January 12, 2025

திருவிடைமருதூர் பகுதியில் 1300 மது பாட்டில்கள் பிடிப்பு

image

கருப்பூர் மேலத்தெரு பகுதியில் சட்டவிரோதமாக காரைக்காலிலிருந்து பாண்டிச்சேரி மாநில மதுபாட்டில்களை கடத்தி வந்து விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பந்தநல்லூர் போலீசார் அந்த இடத்திற்கு சென்று தீவிர சோதனை மேற்கொண்டதில் சுமார் 1300 மதுபாட்டில்கள் கைப்பற்றப்பட்டு குற்றவாளிகளான அசோதமன் மற்றும் அனுசியா ஆகியோரை கைது செய்ததாக காவல் கண்காணிப்பாளர் செய்தி குறிப்பில் வெளியிட்டுள்ளார்.

Similar News

News December 8, 2025

தஞ்சை: திருமணத்தில் நகை திருடிய நபர் கைது

image

திருவாரூரை சார்ந்த பாஸ்கர் தனது சகோதரி மகளின் திருமணத்திற்காக தஞ்சாவூரில் நடைபெறும் திருமணத்திற்கு தனது குடும்பத்தினருடன் வந்திருந்தார். திருமண மண்டபத்தில் வைத்திருந்த அரை பவுன் நகை மற்றும் ரூ.80 ஆயிரம் ரொக்கம் அடங்கிய பையை காணவில்லை. இது குறித்து கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து, காவல்துறையினர் விசாரணையில் கோவில்வெண்ணியைச் சேர்ந்த புருஷோத்தமனை கைது செய்து, நகை, பணத்தை மீட்டனர்.

News December 8, 2025

தஞ்சை மாவட்டத்தில் மின்தடை அறிவிப்பு!

image

தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஆடுதுறை, தஞ்சை நகர், பேராவூரணி, அய்யம்பேட்டை, பூண்டி, மின் நகர் ஆகிய துணைமின் நிலையங்களில் நாளை ( டிச.9) பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால் இங்கிருந்து மின்சாரம் பெரும் பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படவுள்ளது. மேலும் (டிச.10) வடசேரி மற்றும் ஈச்சங்கோட்டை துணைமின் நிலையங்களிலும் மின் நிறுத்தம் செய்யப்படவுள்ளது. ஷேர் பண்ணுங்க

News December 8, 2025

தஞ்சை: அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலி!

image

கும்பகோணம் அருகே கடந்த 30-ந் தேதி இரவு அடையாளம் தெரியாத வாகனம் மோதி 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் படுகாயத்துடன் சாலையோரத்தில் மயங்கி கிடந்தார். இதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

error: Content is protected !!