News January 12, 2025

மணப்பாறை விபத்து: மேலும் ஒருவர் உயிரிழப்பு

image

மணப்பாறை அடுத்த செவலூர் செல்லும் சாலையில் கடந்த 9ஆம் தேதி அவ்வழியே சென்ற டூரிஸ்ட் வாகனம் அதே வழியில் வந்த இருவர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொருவர் மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மணப்பாறை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News

News December 7, 2025

திருச்சில் அரிய வாகை ஆமைக் குஞ்சுகள் பறிமுதல்

image

சிங்கப்பூரிலிருந்து திருச்சி விமான நிலையம் வந்த ஸ்கூட் ஏர்லைன்ஸ் விமானத்தில் வந்த பயணிகளின் உடைமைகளை திருச்சி விமான நிலைய வான் நுண்ணறிவுபிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது, அதில் மலேசியாவை சேர்ந்த இரு பயணிகள் கடத்திவந்த 5,061 ஆமைக்குஞ்சுகளை பறிமுதல் செய்தனர். இதையடுத்து ஆமைக்குஞ்சுகளை கடத்திவந்த இரண்டு பேரிடமும் அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

News December 7, 2025

திருச்சி: ATM பயன்படுத்துவோர் கவனத்திற்கு..

image

திருச்சி மக்களே, நீங்கள் ATM-இல் இருந்து பணம் எடுக்கும் போது, சில சமயம் வங்கி கணக்கிலிருந்து பணம் கழிக்கப்பட்டும், மெஷினில் இருந்து பணம் வெளியே வராது. இத்தகைய சூழலை நீங்கள் எதிர்கொண்டால் உடனே உங்களது வங்கியில் சென்று புகார் அளிக்கலாம். அதன் பின் 5 நாட்களுக்குள் பணம் கிடைக்கவில்லை என்றால் <>இங்கே க்ளிக் <<>>செய்து, RBI-இல் புகார் அளித்தால் போதும் தாமதமான ஒவ்வொரு நாளுக்கும் ரூ.100 இழப்பீடாக வழங்கப்படும்.

News December 7, 2025

திருச்சி: சொந்த வீடு கட்ட அரசின் சூப்பர் ஆஃபர்

image

சொந்த வீட்டின் கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் உள்ள சொந்த வீடு இல்லாதவர்கள், <>pmay-urban.gov.in<<>> என்ற இணையதளம் மூலம் வரும் டிச.31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை இதனுடன் சமர்பிக்க வேண்டும். பிறரும் பயன்பெற SHARE பண்ணுங்க!

error: Content is protected !!