News January 12, 2025

பட்டிமன்ற பேச்சாளர் சாலமன் பாப்பையா மனைவி மறைவு

image

மதுரையை சேர்ந்த பிரபல பட்டிமன்ற பேச்சாளர் பேராசிரியர் சாலமன் பாப்பையாவின் மனைவி ஜெயபாய் இன்று(ஜன.12) வயது மூப்பு காரணமாக இயற்கை எய்தினார். அவரது இறுதிச் சடங்கு இன்று மாலை 5 மணிக்கு மேல்மதுரை ஞான ஒளிபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெயபாய் மறைவுக்கு பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Similar News

News August 5, 2025

JOB ALERT மதுரை கூட்டுறவு வங்கியில் வேலை

image

மதுரை இளைஞர்களே, அனைத்து வகையான கூட்டுறவு வங்கித் துறையில் 1000க்கும் மேலான உதவியாளர் காலியிடங்களுக்கு நேரடியாக ஆட்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். மதுரைக்கு சுமார் 60க்கு மேற்பட்ட காலியிடங்கள் உள்ளன. ஆக. 6 முதல் ஆக. 29க்குள் விண்ணப்பிக்க வேண்டும். அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு இங்கே<> கிளிக் செய்து<<>> பார்க்கலாம். இதற்கான எழுத்துத் தேர்வு செப். 12ல் நடைபெறும். அரசு வேலையில் தேடுவோருக்கு SHARE செய்யவும்.

News August 5, 2025

மதுரையில் எந்தப் பதவியில் யார் ..?

image

▶️மாவட்ட ஆட்சியர் – பிரவீன் குமார் – 0452-2531110
▶️போலீஸ் கமிஷனர் – லோகநாதன் – 0452-2350777
▶️மாவட்ட காவல் கண்காணிப்பாளர் – அரவிந்த் – 0452-2539466
▶️மாநகராட்சி கமிஷனர் – சித்ரா விஜயன் – 0452 2321121
▶️மாவட்ட வருவாய் அலுவலர் – அன்பழகன் – 0452-2532106
இந்த நல்ல தகவலை உங்களுக்கு தெரிந்த அனைவருக்கும் SHARE செய்ங்க கண்டிப்பாக ஒருவருக்காவது உதவும்.

News August 5, 2025

கஞ்சா கடத்தும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

image

மதுரை பாத்திமா கல்லூரி அருகே திண்டுக்கல்லில் இருந்துவந்த பேருந்து ஒன்றில் 4 பேர் கஞ்சா கடத்தி வருவதாக கிடைத்த தகவலின் பேரில் நேற்று முன்தினம் நடத்திய சோதனையில், மதுரையைச் சேர்ந்த ஜஸ்டின் பிரபாகரன் (23), சிவராமபாண்டியன் (22), அருண் பாண்டியன் (26), பிரத்வி ராஜ் (26) எனத் தெரியவந்தது. சுமார் 2 ஆயிரம் கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து கைது செய்தனர். ஒடிசா மாநிலத்திலிருந்து கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது.

error: Content is protected !!