News January 12, 2025
IPL 2025: மார்ச் 23இல் தொடக்கம்

2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டித் தொடர் வரும் மார்ச் 23ஆம் தேதி தொடங்கும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. செய்தியாளர்களிடம் பேசிய அதன் துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா, 18-ஆவது ஐபிஎல் போட்டித் தொடர் தொடங்கும் தேதியை வெளியிட்டார்.
Similar News
News September 15, 2025
Parenting: காய்ச்சலின் போது குழந்தைகள் குளிக்கலாமா?

குழந்தைகளுக்கு ஜுரம் ஏற்படும்போது குளிக்கலாமா என்ற சந்தேகம் பெற்றோர்களுக்கு இருக்கிறது. காய்ச்சலின் போது, உடல் வெப்பநிலை இயல்பை விட அதிகமாக இருக்கும். இதனால் உடல் சூட்டை தணிக்கவும், உடலில் சேரும் பாக்டீரியாக்களை நீக்கவும் வெதுவெதுப்பான நீரில் குளிப்பது நல்லது என டாக்டர்கள் கூறுகின்றனர். ஒருவேளை குளிக்கமுடியாத பட்சத்தில், குழந்தைகளில் உடலை வெதுவெதுப்பான நீரில் துடைப்பது நல்லது. SHARE.
News September 15, 2025
AI மூலம் 8% பொருளாதார வளர்ச்சி: மத்திய அரசு

Nano Banana என்று பொதுமக்கள் வரை பலரும் இன்று AI பயன்படுத்த துவங்கிவிட்டனர். இந்நிலையில், ‘வளர்ச்சியடைந்த பாரதம் 2047’ என்ற இலக்கில், 8%-க்கும் மேலான பொருளாதார வளர்ச்சியை AI உருவாக்கும் என மத்திய அரசின் நிதி ஆயோக் அறிக்கை கூறியுள்ளது. குறிப்பாக, நிதி மற்றும் உற்பத்தி சார்ந்த துறைகளில் AI அதிகளவு பயன்படுத்தப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீங்கள் பயன்படுத்தும் AI கருவி எது?
News September 15, 2025
இன்றிரவு 12 மணிக்குள் இதை செய்யுங்கள்

வருமானவரி கணக்கு தாக்கல் (IT Returns) செய்வதற்கான காலக்கெடு இன்றுடன் முடிவடைகிறது. காலக்கெடு மேலும் நீட்டிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்றே கடைசி என வருமானவரித் துறை திட்டவட்டமாக அறிவித்துள்ளது. ஆகவே, உங்கள் கணக்கை இன்றிரவு 12 மணிக்குள் <<17715443>>தாக்கல்<<>> செய்துவிடுங்கள். தவறினால் <<17712332>>₹5,000 அபராதம்<<>> செலுத்த வேண்டியிருக்கும். இதுவரை 6.7 கோடி பேர் தங்கள் IT Returns-ஐ தாக்கல் செய்துள்ளனர்.