News January 12, 2025
திருவாரூர்: சீமான் மீது குவியும் புகார்கள்

வடலூரில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது, பெரியார் குறித்து அவதூறான வகையில் சர்ச்சைக்குரிய கருத்தை சீமான் தெரிவித்தார். இதனால் கொதித்தெழுந்த திராவிட இயக்கத்தினர் தமிழகம் முழுவதும் சீமான் மீது காவல் நிலையங்களில் புகாரளித்து வருகின்றனர். இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு காவல்நிலையங்களில் சீமான் மீது 30-க்கும் மேற்பட்ட புகார்கள் அளிக்கப்பட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
Similar News
News January 21, 2026
திருவாரூர்: இழந்த பணத்தை திரும்ப பெற வேண்டுமா?

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!
News January 21, 2026
திருவாரூர்: ஊராட்சி மன்ற அலுவலகம் முற்றுகை

திருவாரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பழையவலம் ஊராட்சியில் சுமார் 1,000 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காகவும், வீட்டு உபயோகத்துக்காகவும் பல ஆண்டுகளாக வழங்கப்பட்டு வந்த குடிநீர், கடந்த ஓராண்டாக உப்பு நீராக வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில், பழையவலம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் குடங்களுடன் பெண்கள் முற்றுகையிட்டனர்.
News January 21, 2026
திருவாரூரில் சத்துணவு ஊழியர்கள் சாலை மறியல்

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே, சத்துணவு ஊழியர்கள் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தேர்தல் வாக்குறுதியின் படி சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்; குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் வழங்க வேண்டும்; பணிக்கொடை அமைப்பாளர்களுக்கு ரூ.5 லட்சமும், சமையலர் உதவியாளர்களுக்கு ரூ.3 லட்சமும் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.


