News January 12, 2025
திருவாரூர்: சீமான் மீது குவியும் புகார்கள்

வடலூரில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது, பெரியார் குறித்து அவதூறான வகையில் சர்ச்சைக்குரிய கருத்தை சீமான் தெரிவித்தார். இதனால் கொதித்தெழுந்த திராவிட இயக்கத்தினர் தமிழகம் முழுவதும் சீமான் மீது காவல் நிலையங்களில் புகாரளித்து வருகின்றனர். இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு காவல்நிலையங்களில் சீமான் மீது 30-க்கும் மேற்பட்ட புகார்கள் அளிக்கப்பட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
Similar News
News January 13, 2026
திருவாரூர்: நிலம் வைத்திருப்போர் கவனிக்க

திருவாரூர் மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் நிலப்பட்டா யார் பெயரில் இருக்கிறது? என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். <
News January 13, 2026
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

திருவாரூர் மாவட்ட நிர்வாகிகள் சார்பில் மாசில்லா போகி, மகிழ்ச்சியான பொங்கல் கொண்டாட அறிவுறுத்தி உள்ளது. அதன்படி இயற்கை சார்ந்த பொருட்களைக் கொண்டு பாரம்பரியமாக போகி பண்டிகை கொண்டாடவும்; சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லாத பொருட்களை பயன்படுத்தவும்; பிளாஸ்டிக் டயர், டீம் ரப்பர், செயற்கை துணிகளை எரிக்க வேண்டாம் எனவும் மாவட்ட ஆட்சியர் சார்பில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
News January 13, 2026
திருவாரூர்: இனி சொத்து தகராறுக்கு Whatsapp-ல் தீர்வு!

திருவாரூர் மக்களே, இனி வக்கீல் ஆலோசனை பெற நீங்கள் அங்கும் இங்கும் அலைய வேண்டிய அவசியமில்லை. இதற்காக மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. ‘72177 11814’ என்ற எண்ணிற்கு உங்களது Whatsapp-ல் இருந்து ஒரு மெசேஜ் அனுப்பினால் போதும், சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, சிவில் வழக்கு போன்றவற்றிற்கு இலவச சட்ட ஆலோசனைகள் வழங்கப்படும். இந்த பயனுள்ள தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!


