News January 12, 2025
17ஆம் தேதி திமுக வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்

ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு பிப்ரவரி 5ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் திமுக கொள்கை பரப்பு இணைச் செயலாளர் வி.சி. சந்திரகுமார் வேட்பாளராக அண்மையில் அறிவிக்கப்பட்டார். இதையடுத்து அவர், தேர்தலில் போட்டியிடுவதற்காக தனது வேட்பு மனுவை தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் வருகிற 17ஆம் தேதி தாக்கல் செய்யவுள்ளதாக திமுக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Similar News
News September 15, 2025
ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகள்.. சாதனை பெண் PHOTO

மகராஷ்டிராவில் பெண் ஒருவர் நேற்று <<17711542>>ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள்<<>> பெற்ற செய்தி வைரலாகி வருகிறது. ஒரே பிரசவத்தில் அதிக குழந்தைகள் பெற்றவர் யார் தெரியுமா? 2021-ல் மேற்கு ஆப்ரிக்க நாடான மாலியில் Halima Cissé என்பவர் ஒரே பிரசவத்தில், 5 பெண், 4 ஆண் என மொத்தம் 9 குழந்தைகள் பெற்றெடுத்துள்ளார். அனைத்து குழந்தைகளும் நலமாக உள்ளன. இந்த சாதனைக்காக இவர் கின்னஸ் புத்தகத்திலும் இடம்பிடித்துள்ளார்.
News September 15, 2025
சுவிஸ் செஸ் தொடரில் வைஷாலி சாம்பியன்

ஃபிடே கிராண்ட் சுவிஸ் செஸ் தொடரின் மகளிர் பிரிவில் தமிழகத்தின் வைஷாலி, 2-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றார். 11 சுற்றுகள் கொண்ட தொடரில் 8 புள்ளிகளை பெற்று வைஷாலி முதல் இடத்தை பிடித்துள்ளார். இதன் மூலம் அவர் 2026 உலக சாம்பியன்ஷிப் கேண்டிடேட் தொடருக்கு தகுதி பெற்றுள்ளார்.
News September 15, 2025
EPS 4-வது இடத்துக்கு செல்வார்: புகழேந்தி

தொகுதிவாரியாக விஜய் செல்லும்போது EPS, 4-வது இடத்துக்கு தள்ளப்படுவார் என்று பெங்களூரு புகழேந்தி எச்சரித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெரியார், அண்ணா, MGR, ஜெ., வழியில் வந்த ADMK தொண்டர்கள், RSS கொள்கை (அ) BJP-ஐ பின்பற்ற தயாராக இல்லை என கூறியுள்ளார். எனவே, BJP-க்கும் ADMK தொண்டர்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.