News January 12, 2025
வேல்முருகனுக்கு அதிகாரிகள் இட்ட உத்தரவு!

தமிழக அரசு ஆளுநருடன் பகைத்துக் கொள்ளாமல் இருப்பதற்கு சில முயற்சிகளை எடுத்து வருவதாக தகவல் கிடைத்துள்ளதாக தவாக தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவை நிகழ்வுகள் குறித்து பேசிய அவர், “நான் ஏதாவது செய்தால், திமுக அரசின் சாதனை பட்டியலைக் கொண்ட உரையை வாசிக்காமல் சென்றுவிடுவார் என அதிகாரிகள் நினைத்துள்ளனர். அதனால் ஆளுநர் வரும்போது, பிரச்னை செய்யக்கூடாது என உத்தரவிட்டு இருக்கின்றனர்” என்றார்.
Similar News
News September 15, 2025
அரியலூர் வளர்ச்சி திட்டப் பணிகள் ஆய்வுக் கூட்டம்

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளின் முன்னேற்ற நிலை குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குநருமான மு.விஜயலெட்சுமி தலைமையிலும், மாவட்ட ஆட்சியர் பொ.இரத்தினசாமி முன்னிலையில் நடைபெற்றது.
News September 15, 2025
ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகள்.. சாதனை பெண் PHOTO

மகராஷ்டிராவில் பெண் ஒருவர் நேற்று <<17711542>>ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள்<<>> பெற்ற செய்தி வைரலாகி வருகிறது. ஒரே பிரசவத்தில் அதிக குழந்தைகள் பெற்றவர் யார் தெரியுமா? 2021-ல் மேற்கு ஆப்ரிக்க நாடான மாலியில் Halima Cissé என்பவர் ஒரே பிரசவத்தில், 5 பெண், 4 ஆண் என மொத்தம் 9 குழந்தைகள் பெற்றெடுத்துள்ளார். அனைத்து குழந்தைகளும் நலமாக உள்ளன. இந்த சாதனைக்காக இவர் கின்னஸ் புத்தகத்திலும் இடம்பிடித்துள்ளார்.
News September 15, 2025
சுவிஸ் செஸ் தொடரில் வைஷாலி சாம்பியன்

ஃபிடே கிராண்ட் சுவிஸ் செஸ் தொடரின் மகளிர் பிரிவில் தமிழகத்தின் வைஷாலி, 2-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றார். 11 சுற்றுகள் கொண்ட தொடரில் 8 புள்ளிகளை பெற்று வைஷாலி முதல் இடத்தை பிடித்துள்ளார். இதன் மூலம் அவர் 2026 உலக சாம்பியன்ஷிப் கேண்டிடேட் தொடருக்கு தகுதி பெற்றுள்ளார்.