News March 26, 2024

நாயை அடித்துக் கொன்றவர் மீது வழக்கு

image

அருப்புக்கோட்டை கட்ட கஞ்சம்பட்டியை சேர்ந்தவர் காவியா(24). இந்நிலையில் நேற்று‌ (25.3.24) காவியா வீட்டில் இருந்த நாய் அதே பகுதியை சேர்ந்த வல்லரசு என்பவரின் நாயை பார்த்து குலைத்ததாகவும், இதனால் ஆத்திரமடைந்த வல்லரசு கம்பியால் காவியா வீட்டில் இருந்த நாயை அடித்து கொன்று விட்டதாகவும், மேலும் காவியா & அவரது அத்தைக்கு வல்லரசு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்

Similar News

News February 11, 2026

விருதுநகர்: சொந்த வீடு கட்ட சூப்பர் திட்டம்

image

உங்கள் சொந்த வீடு கனவை நிறைவேற்றும் சூப்பர் திட்டமாக உள்ளது பிரதம மந்திரியின் வீட்டு வசதி திட்டம். இத்திட்டத்தின் மூலம் பயனாளிகளுக்கு வீடு கட்ட ரூ.2.30 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது. சொந்த வீடு இல்லாதவர்கள் இந்த <>லிங்க்<<>> மூலம் விண்ணப்பிக்கலாம். கூடுதல் தகவலுக்கு உங்கள் மாவட்டத்திற்கு மத்திய அரசால் நியமிக்கப்பட்ட அலுவலரை அணுகலாம். *நண்பர்களுக்கும் பகிரவும்*

News February 11, 2026

விருதுநகரில் மட்டுமே கிடைக்கும்…அதிசயம்!

image

விருதுநகர் மாவட்டத்தில் மட்டுமே மானாவாரி பகுதிகளில் மழைக்காலத்தில் அதலைக்காய் செழிப்பாக வளர்ந்திருப்பதைக காணலாம். இதில் பல மருத்துவக் குணங்கள் நிறைந்துள்ளது. குழந்தைகளின் குடற்புழுக்களை நீக்கம் செய்வதற்கு இது மிகச் சிறந்த மருந்தாகும். சமீப காலமாக இதன் விழிப்புணர்வு அதிகரித்து வருவதால் பிற மாவட்ட மக்களும் இதனை சமையலுக்குப் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். ஷேர் பண்ணுங்க

News February 11, 2026

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஒருவர் தற்கொலை

image

ஸ்ரீவி, கொத்தன்குளம் பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததால் மனைவி பெருமாளம்மாள் கண்டித்துள்ளார். இதனால் அடிக்கடி செத்து விடுவேன் என்று சொல்லியுள்ளார். இந்நிலையில், பெருமாளம்மாள் மகளை விடுவதற்கு சென்றிருந்த நிலையில், மாரியப்பன் காட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். வன்னியம்பட்டி போலீசார் பெருமாளம்மாளின் புகாரின் பேரில் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!