News January 12, 2025

கனக சபையில் தரிசனம் செய்ய போலீசார் பாதுகாப்பு

image

சிதம்பரம் நடராஜர் கோயிலில் இன்று மாலை தெய்வீக பக்தர்கள் பேரவை சார்பில் கனக சபை மீது ஏறி சுவாமி தரிசனம் செய்வதற்காக காவல்துறையிடம் பாதுகாப்பு கோரியிருந்தனர். அதன் அடிப்படையில் சிதம்பரம் டிஎஸ்பி லாமேக் தலைமையில் போலீசார் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய பாதுகாப்பு அளித்தனர். சுவாமி தரிசனம் செய்ய பாதுகாப்பு அளித்த காவல்துறைக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

Similar News

News February 3, 2026

கடலூர்: 70% மானியத்தில் பம்புசெட் வேண்டுமா?

image

தமிழக அரசு விவசாயிகளுக்கு 70% மானியத்தில் சூரியநில அரசும், 30% மத்திய அரசும் வழங்குகிறது. இதற்கு <>உழவன் <<>>App மூலமாக விண்ணப்பித்து, பெயரை ஒளியில் இயங்கும் பம்புசெட்டுகளை வழங்கி வருகிறது. இந்த 70 சதவீதத்தில், 40 % முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் அறிய உங்கள் மாவட்ட வேளாண் பொறியியல் துறை அலுவலகத்தை அணுகவும். பிறரும் பயன்பெற SHARE செய்து உதவுங்கள்.

News February 3, 2026

கடலூர்: வாகன ஏலம் அறிவிப்பு – எஸ்.பி

image

கடலூர் மாவட்டத்தில் மது கடத்தலின் போது பறிமுதல் செய்யப்பட்ட இரண்டு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் பொது ஏலம் விடப்பட உள்ளதாக எஸ்.பி ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். கடலூர் ஆயுதப்படை மைதானத்தில் வரும் பிப்.12, காலை 10 மணியளவில் 79 வாகனங்கள் பொது ஏலம் விடப்படும் என்றும், இதில் கலந்து கொள்ள விரும்புவோர் பிப்.10-ம் தேதி முன் வைப்பு தொகை செலுத்தி ஏலத்தில் கலந்து கொள்ளலாம் என எஸ்.பி தெரிவித்துள்ளார்.

News February 3, 2026

‘அண்ணா புகழைப் போற்றி வணங்குகிறேன்’ – சிதம்பரம் MLA

image

‘தமிழன்னையின் தவப்புதல்வன், கடமை கண்ணியம் கட்டுப்பாடு காத்த தமிழ் தாயின் தலைமகன் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 57 வது நினைவு தினத்தில் அவர்தம் புகழை போற்றி வணங்குகிறேன்’ என்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக கடலூர் மாவட்ட செயலாளரும், சிதம்பரம் எம்எல்ஏவுமான கே.ஏ. பாண்டியன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!