News January 11, 2025

தேனியில் தொழிற்பழகுநர் பயிற்சி சேர்க்கை முகாம்

image

தேனி மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தின் மூலம், தொழிற்பழகுநர் பயிற்சி சேர்க்கை முகாம் 20.01.2025 அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் நடைபெறவுள்ளது. இம்முகாமில், தேனி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு தொழிற்பழகுநர் பயிற்சிக்கு 500-க்கும் மேற்பட்ட இடங்களை நிரப்ப உள்ளனர். தகுதியுள்ள நபர்கள் இம்முகாமினை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

Similar News

News November 12, 2025

தேனி: வாக்காளர் பெயர் சேர்க்க முக்கிய அறிவிப்பு!

image

தேனி மக்களே, வாக்காளர் படிவத் திருத்தங்களுக்காக வீடு வீடாக SIR படிவம் உங்க பகுதில வழங்கும் போது நீங்க வீட்ல இல்லையா? உங்க ஓட்டு பறிபோயிடும்ன்னு கவலையா? அதற்கு ஒரு வழி இருக்கு. இங்கு <>கிளிக் செய்து<<>> Fill Enumeration Form -ஐ தேர்ந்தெடுத்து மொபைல் எண் (அ) வாக்காளர் எண் மூலம் நுழைந்து SIR படிவத்தை பூர்த்தி செய்து உங்க பெயரை வாக்காளர் பட்டியலில் சேருங்க. இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News November 12, 2025

தேனி: மனைவியை துன்புறுத்திய கணவர் மீது வழக்கு

image

போடி அருகே சிலமலை பகுதியை சேர்ந்தவர் அருள்கனி (22). இவரது கணவர் காளிமுத்து (28). இந்த தம்பதியருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் காளிமுத்து தினமும் மது அருந்திவிட்டு, குடும்ப செலவிற்கு பணம் தராமல் மனைவி, குழந்தைகளை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். இது குறித்து அருள்கனி அளித்த புகாரில் போடி அனைத்து மகளிர் போலீசார் காளிமுத்து மீது நேற்று (நவ.11) வழக்கு பதிவு செய்துள்ளனர்.

News November 12, 2025

போடி: வீடு புகுந்து நகைகளை திருடிய சிறுவர்கள்

image

போடி அருகேயுள்ள துரைராஜபுரத்தை சேர்ந்த சுரேஷ்குமார் (27) என்பவரது வீட்டுக்குள் புகுந்த பொட்டல்களம் கிராமத்தை சேர்ந்த 15, 13 வயது உடைய 2 சிறுவர்கள் பீரோவை திறந்து ஒன்றரை பவுன் தங்க சங்கிலியை திருடி சென்றனர். இதுகுறித்து சுரேஷ்குமார் அளித்த புகாரின்பேரில், போடி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!