News January 11, 2025
இடைத்தேர்தலில் அதிமுக போட்டியில்லை

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிப்பதாக இபிஎஸ் அறிவித்துள்ளார். திமுகவினர் ஆட்சி, அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவார்கள். பணபலம், படைபலத்துடன் பல்வேறு அராஜகங்கள், வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படும் என்பதால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார். ஒருவேளை தேமுதிக போட்டியிட்டால், அதிமுக ஆதரவளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News August 5, 2025
‘ஆபரேஷன் சிந்தூர்’ லோகோ பாதுகாக்கப்படுமா?

ஆபரேஷன் சிந்தூர் லோகோவை வணிக பயன்பாட்டிற்கு கோரும் எந்த நிறுவனங்களின் விண்ணப்பங்களும் இதுவரை ஏற்கப்படவில்லை என மத்திய வணிக அமைச்சகம் தெரிவித்துள்ளது. ‘Operation Sindoor’ (அ) ‘Ops Sindoor’ என்ற பெயரில் டிரேட்மார்க் கோரி, பல்வேறு நிறுவனங்களிடம் இருந்து இதுவரை 46 விண்ணப்பங்கள் பெறப்பட்டதாகவும் கூறியுள்ளது. அதேவேளையில், ஆபரேஷன் சிந்தூர் லோகோவை பாதுகாக்க பாதுகாப்பு அமைச்சகமும் வலியுறுத்தியுள்ளது.
News August 5, 2025
இன்றைய நல்ல நேரம்

▶ஆகஸ்ட் 5 – ஆடி 20 ▶கிழமை: செவ்வாய் ▶நல்ல நேரம்: 7:45 AM – 8:45 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 3:00 PM – 4:30 PM ▶எமகண்டம்: 9:00 AM – 10:30 AM ▶குளிகை: 12:00 PM – 1:30 PM ▶திதி: துவாதசி ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால் ▶பிறை: வளர்பிறை.
News August 5, 2025
இன்று எந்த திடீர் அறிவிப்பும் வராது: உமர் உறுதி

ஜம்மு & காஷ்மீருக்கு இன்று மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கும் அறிவிப்பு வெளியாகலாம் என்ற யூகங்களை J&K CM உமர் அப்துல்லா நிராகரித்துள்ளார். ஆனால் வரும் காலங்களில் அது நடக்க வாய்ப்புள்ளதாகவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். J&K யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டு இன்றுடன் 5 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதைமுன்னிட்டு PM மோடி, அமித்ஷா இருவரும் நேற்று ஜனாதிபதியை சந்தித்ததால் மேற்கூறிய யூகங்கள் பரவியது.