News January 11, 2025
கடலில் குளிக்க மக்களுக்கு தடை விதிப்பு

சென்னையில் காணும் பொங்கலன்று (ஜன.16) கடலில் குளிக்க மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் அன்றைய தினம் 16,000 போலீசார், 1,500 ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக காவல் ஆணையர் அருண் கூறியுள்ளார். பைக் சாகசத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Similar News
News February 9, 2026
சென்னை: ஊஞ்சல் புடவை இறுகி துடிதுடித்து பலி

சோழவரம் அடுத்த ஆத்தூரை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகன் மோனிஷ் (12). நேற்று மாலை விளையாடி கொண்டிருந்த போது சகோதரியுடன் சண்டை போட்டுள்ளார். அப்போது ஊஞ்சல் புடவையை கழுத்தில் சுற்றிக்கொண்டு தற்கொலை செய்யப் போவதாக மிரட்டியுள்ளார். ஆனால் எதிர்பாராத விதமாக புடவை கழுத்தில் சுற்றி இறுக்கியுள்ளது. இதில் மோனிஷ் பரிதாபமாக இழந்தார். இதுகுறித்து சோழவரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
News February 9, 2026
சென்னையில் பயங்கரம்.. வெட்டி சாய்த்த கும்பல்!

கொளத்தூரை சேர்ந்தவர் ஜான்பாஷா(39). மெக்கானிக்கான இவர் ராஜி(40) என்பவரது கடையில் வேலை பார்த்து வந்தார். ராஜியின் மகளை கொளத்தூர் பாலாஜி நகரை சேர்ந்த விக்னேஷ்(24) என்பவர் இன்ஸ்டாவில் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை ராஜி கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த விக்னேஷ்யின் கும்பல் அரிவாளுடன் வந்து ராஜியை வெட்ட முயன்றார். குறுக்கே வந்த ஜான்பாஷாவுக்கு கை, தலையில் சரமாரியாக அரிவாள் வெட்டு விழுந்தது.
News February 9, 2026
சென்னையில் இன்று கரண்ட் கட்!

சென்னை மாதவரம் மற்றும் விநாயகபுரம் பகுதிகளில் மின்வாரியத்தின் இன்று (பிப்.09) மாதாந்திர பராமரிப்புப் நடைபெறவுள்ளது. அதன்படி, காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை சரஸ்வதி நகர், கந்தசுவாமி நகர், சின்ன தோப்பு, ரங்கா கார்டன், அன்பு வளர்மதி நகர், டி.ஜி. சாமி நகர், சுமங்கலி நகர் மற்றும் விநாயகபுரம் உள்ளிட்ட சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் மின் விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளது. ஷேர் பண்ணுங்க.


