News January 11, 2025

நாகப்பட்டினத்தில் கனமழை எச்சரிக்கை

image

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது விட்டு விட்டு மழை பெய்து வரும் நிலையில், வானிலை ஆய்வு மையம் இன்று பல்வேறு மாவட்டங்களுக்கு மழை முன்னெச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி நாகப்பட்டினம் மாவட்டத்தில் இன்று (ஜன.11) கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பா பயிர்கள் அறுவடைக்கு இன்னும் ஓரிரு நாட்களே உள்ள நிலையில் இந்த அறிவிப்பு விவசாயிகளை சற்று கலக்கம் அடைய செய்துள்ளது. SHARE NOW!

Similar News

News December 10, 2025

நாகை: CM Cell-ல் புகார் அளிப்பது எப்படி?

image

1. முதலில், <>http://cmcell.tn.gov.in <<>> என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.
2. பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3. இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4. பின்னர் ‘Track Grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்கள்.

News December 10, 2025

நாகை: மாற்றுத் திறனாளிகளுக்கு முக்கிய அறிவிப்பு

image

கீழ்வேளுர் வட்டம் ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் வருகிற 10-ந்தேதி புதன்கிழமை காலை 9 மணி முதல் மதியம் ஒரு மணி வரை நடத்தப்பட உள்ளது. எனவே மாற்றுத்திறனாளிகள் அனைவரும் முகாமில் பங்கேற்று பயன் பெறுமாறு நாகை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்

News December 10, 2025

நாகை மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

1995-ம் ஆண்டு முதல் சமூக நீதிக்காக பாடுபட்டவர்களுக்கு தமிழக அரசு ‘தந்தை பெரியார் விருது’ வழங்கி கௌரவித்து வருகிறது. அந்த வகையில், நாகை மாவட்டத்தில் சமூக நீதிக்காக பாடுபட்டவர்கள் தங்களது சுய விவரம், முகவரி மற்றும் சமூக நீதிக்காக பாடுபட்ட விபரங்களை வரும் டிச.18-க்குள் நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமர்ப்பித்து விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!