News January 11, 2025
குமரி அணைகளுக்கு இன்றைய நீர் வரத்து விவரம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை 520 கன அடியும் பெருஞ்சாணி அணைக்கு 135 கன அடியும் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பேச்சிப்பாறை அணையில் இருந்து 690 பெருஞ்சாணி அணையில் இருந்து 360 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.நேற்று பேச்சிப்பாறை அணைக்கு 339 கன அடியும் பெருஞ்சாணி அணைக்கு 125 கன அடி தண்ணீரும் வந்து கொண்டிருந்தது.
Similar News
News November 14, 2025
1500 கிலோ ரேஷன் அரிசி கடத்தல்: அதிகாரிகள் நடவடிக்கை

குமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு அரிசி கடத்திச் செல்லப்படுவதை தடுக்க பறக்கும் படையினர் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில் விளவங்கோடு வட்ட வழங்கல் அதிகாரிகள் இன்று மேற்கொண்ட சோதனையில் காஞ்சிரக்கோடு எந்த இடத்தில் காரில் கடத்திச் செல்லப்பட்ட 1500 கிலோ ரேஷன் அரிசியை கண்டுபிடித்தது பறிமுதல் செய்தனர். இது தொடர்பான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
News November 14, 2025
நாகர்கோவிலில் இருந்து பம்பைக்கு சிறப்பு பேருந்து

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் நாகர்கோவில் மண்டலம் சார்பில் நாகர்கோவிலில் இருந்து பம்பைக்கு இம்மாதம் பதினாறாம் தேதி முதல் ஜனவரி மாதம் இருபதாம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாக அரசு போக்குவரத்து கழகம் இன்று தெரிவித்துள்ளது. நாகர்கோவிலில் இருந்து காலை 6 மாலை 6:30 இரவு 7 மற்றும் 7:30 மணிகளில் இந்தப் பேருந்து இயக்கப்பட உள்ளது. (இதன் பயண கட்டணம் ரூ.364) SHARE
News November 14, 2025
குமரியில் 3 பேருக்கு 5 ஆண்டுகள் சிறை

தேங்காபட்டணம் பகுதியை சேர்ந்த சிறுமிக்கு 2020-ம் ஆண்டு பாலியல் தொல்லை அளித்த இஸ்மாயில்(34), ஜாகீர் உசேன்(53), அப்துல் ஜபர்(67), முள்ளூர்துறை சகாயதாசன்(52),சுந்தரய்யா மீது குளச்சல் மகளிர் போலீசார் வழக்கு பதிந்தனர். நாகர்கோவில் போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடந்த விசாரணையில் நேற்று நீதிபதி சுந்தரய்யா, இஸ்மாயில் உயிரிழந்த நிலையில் ஏனைய 3 பேருக்கும் தலா 5 ஆண்டு சிறை, ரூ.3000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


