News January 11, 2025
தமிழகத்தில் விரைவில் UPS பென்ஷன் திட்டம்

புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (UPS) விரைவில் அமல்படுத்தப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். இந்தத் திட்டத்தின் கீழ் அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச பென்ஷன் கிடைக்க வழிவகை ஏற்படும். ஓய்வுபெறும் போது கடைசி 12 மாதங்களில் பெற்ற சராசரி Basic Salaryஇல் 50% உறுதியாகக் கிடைக்கும். பழைய ஓய்வூதிய திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என அரசு ஊழியர்கள் வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
Similar News
News August 5, 2025
வேலைவாய்ப்பு பற்றி வெள்ளை அறிக்கை இல்லை: EPS

தமிழகம் கல்வியில் சிறந்து விளங்குவதற்கு கடந்த அதிமுக அரசு அமைத்த அடித்தளமே காரணமென EPS தெரிவித்துள்ளார். நெல்லையில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர், 17 அரசு மருத்துவம், 21 பாலிடெக்னிக், 67 கலை அறிவியல் கல்லூரிகளை கடந்த அதிமுக அரசு அமைத்ததாக குறிப்பிட்டார். உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை திமுக நடத்தியதாகவும், அதன்மூலம் எத்தனை வேலைவாய்ப்புகள் கிடைத்தது என்பது பற்றி வெள்ளை அறிக்கை வெளியிடவில்லை என்றார்.
News August 5, 2025
அனுபவம் சொல்லித்தரும் பாடம்

*உங்களால் எல்லாரையும், எல்லா நேரத்திலும் திருப்திப்படுத்த முடியாது *உங்கள் சுயமதிப்பானது உங்களை சார்ந்ததே. உங்களை பற்றி மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதல்ல *சிலர், சில சமயங்களில் கடுமையாக நடந்து கொள்வதற்கு நீங்கள் தான் காரணம் என்று நினைக்காதீர்கள். அவர்களின் சொந்தப் பிரச்சனையால் அவர்கள் அப்படி நடந்துகொள்ள நேரிட்டிருக்கலாம்…. உங்கள் அனுபவத்தில் நீங்கள் கற்றுக் கொண்டதை கமெண்ட்டில் பகிரலாமே?
News August 5, 2025
இந்தியா மீது வரியை உயர்த்துவேன்: டிரம்ப்

இந்தியப் பொருட்களுக்கு 25% வரி விதித்து டிரம்ப் அண்மையில் உத்தரவிட்டார். இந்நிலையில் வரி மேலும் உயர்த்தப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். ரஷியாவிடமிருந்து வாங்கும் எண்ணெயை திறந்த சந்தையில் அதிக லாபத்திற்கு இந்தியா விற்பதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். மேலும் உக்ரைன் போர் குறித்து இந்தியாவுக்கு கவலையில்லை என்றும், இந்தியாவின் நடவடிக்கைக்காகவே அதன் மீதான வரியை உயர்த்துவேன் எனவும் தெரிவித்துள்ளார்.