News January 11, 2025

நீலகிரி: ரேஷன் கடையை துவம்சம் செய்த யானைகள்

image

நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் தாலுகா பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் கரும்பு கட்டுகள் வைக்கப்பட்டு உள்ளன. கூடலூர் தாலுகா நாடுகாணி அருகே பாண்டியாறு குடோன் பகுதியில் ரேஷன் கடை உள்ளது. பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்குவதற்காக கரும்பு கட்டுகள் ரேஷன் கடைக்குள் வைக்கப்பட்டு இருந்தன. இதை தேடி வந்த காட்டு யானைகள் கடையை உடைத்து அத்தியாவசிய பொருட்களை அள்ளி தின்று விட்டு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Similar News

News February 15, 2026

நீலகிரியில் பரபரப்பு

image

நீலகிரி: பந்தலூர் வட்டம், நெல்லியாளம் கிராமத்தைச் சேர்ந்த மேபீல்டு பூதானகுன்னு பகுதி பொதுமக்கள், தங்கள் பகுதியில் நிலவும் நீண்டகாலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணக் கோரி தேர்தல் புறக்கணிப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அதில் “வருகின்ற தேர்தலில் வாக்குச்சாவடிக்குள் நுழைய மாட்டோம்” என மேபீல்டு பஜார் பகுதியில் பொதுமக்கள் பதாகை வைத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News February 15, 2026

நீலகிரி மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

image

நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களின் வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்தும் நோக்கில் தாட்கோ புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இப்பயிற்சிகள் இளைஞர்களுக்கு நவீன காலத் தேவைகளுக்கேற்ப வேலைவாய்ப்பை பெற்று தரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆர்வமுள்ள இளைஞர்கள் தாட்கோவின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tahdco.com மூலம் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்.

News February 15, 2026

நீலகிரி இரவு ரோந்து போலீசார் விபரம்

image

நீலகிரி மாவட்டத்தில் இன்று (14.02.2026) இரவு ரோந்து பணிக்கு உதகை நகர் மற்றும் ஊரக உட்கோட்டம், குன்னூர், கூடலூர், தேவாலா, ஆகிய உட்கோட்டங்களில் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் செய்யலாம். இந்த தகவல் நீலகிரி மாவட்ட காவல்துறை சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது

error: Content is protected !!