News January 11, 2025
ரயிலில் இது தெரியாம ஏறாதீங்க!

முன்பதிவில்லாத டிக்கெட்டை UTS செயலியில் எடுத்துவிட்டீர்கள் என்றால், 3 மணிநேரத்திற்குள் ரயிலில் ஏறிவிட வேண்டும். அதன் பின்னர் டிக்கெட் காலாவதியாகிவிடும். அப்படி, காலாவதியான பிறகு பயணிப்பது, டிக்கெட் இன்றி பயணிப்பதற்கு சமம். இதனை டிக்கெட் பரிசோதகர் கண்டறிந்துவிட்டால் இந்திய ரயில்வே விதிமுறையின்படி ₹250 அபராதம் விதிக்கப்படும். அதே போல, பயணத்திற்கான கட்டணத்தையும் செலுத்த வேண்டும். SHARE IT.
Similar News
News August 4, 2025
மிரட்டலுக்கு அஞ்சோம்… ரஷ்ய ஆயில் வாங்கும் இந்தியா

ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்த வேண்டும்; இல்லையெனில் வரிவிதிப்பு மற்றும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அமெரிக்கா எச்சரித்தது. ஆனால், ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தும் எண்ணம் இல்லை என்று இந்திய அரசுத் தரப்பில் கூறப்பட்டுள்ளது. வார இறுதியில் கூட ரஷ்யாவிலிருந்து மில்லியன் கணக்கான பேரல்கள் எண்ணெய், இந்திய துறைமுகங்களை அடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
News August 4, 2025
₹105 கோடியை வசூலித்தது ‘மகாவதாரம் நரசிம்மா’

‘மகாவதாரம் நரசிம்மா’ படத்தின் வசூல் ₹105 கோடியை தாண்டிவிட்டதாக ஹோம்பலே பிலிம்ஸ் அறிவித்துள்ளது. இரணியகசிபு, அவரது மகன் பிரகலாதன், மகா விஷ்ணுவை மையமாக வைத்து புராண அனிமேஷன் படமாக தயாரித்து தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியிடப்பட்டது. ‘மகாவதார் சினிமாட்டிக் யுனிவர்ஸ்’-ன் கீழ் மகாவிஷ்ணுவின் 10 அவதாரங்களை விவரிக்கும் வகையில் படங்களை தயாரித்து அடுத்தடுத்து வெளியிடவுள்ளது. நீங்க படம் பார்த்துட்டீங்களா?
News August 4, 2025
திமுகவுக்கு கூட்டணி, அதிமுகவுக்கு மக்கள்: EPS

விவசாயிகள், ஆசிரியர்கள் என அனைத்து தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபடுவதாகவும், போராட்டம் நடைபெறாத நாளே இல்லை என்ற அளவுக்கு போராட்டக்களமாக தமிழ்நாடு மாறிவிட்டதாகவும் இபிஎஸ் விமர்சித்துள்ளார். பொய் வாக்குறுதி அளித்து திமுக ஆட்சியை பிடித்ததாகவும், திமுகவின் தேர்தல் அறிக்கை பொய் அறிக்கை என்றும் கூறினார். கூட்டணியை நம்பியுள்ள கட்சி திமுக என்றும், ஆனால் மக்களை நம்பி அதிமுக உள்ளதாகவும் தெரிவித்தார்.