News January 11, 2025
போர் வீரர்களாக எங்களுடன் சேருங்கள்: ராகுல்

பிஹார் மாநிலம் பாட்னாவில் வரும் 18ஆம் தேதி அரசியலமைப்பு பாதுகாப்பு மாநாடு நடைபெறும் என ராகுல் காந்தி அறிவித்துள்ளார். அரசியலமைப்பு சட்டத்தின் அனைத்து உரிமைகளையும் பெற ஒவ்வொரு இந்தியனுக்கும் உரிமை உண்டு எனவும், அரசியலமைப்பை பாதுகாப்பது நம் அனைவரின் கடமை என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஆகையால், தங்களுடன் சேருங்கள், நீதியின் போர் வீரராகுங்கள் என மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
Similar News
News August 4, 2025
தர்மஸ்தலம் மர்மம்: தோண்ட தோண்ட எலும்புக் கூடுகள்

கர்நாடகாவின் தர்மஸ்தலம் கிராமத்தில், பெண்கள், சிறுமிகள் உள்பட பலர் <<17135923>>கொல்லப்பட்டு<<>> புதைக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து SIT களமிறங்கியதில் கடந்த வாரம் ஒரு உடலின் எலும்புகள் மட்டும் கிடைத்தது. இந்நிலையில், மேலும் தோண்டிப் பார்த்ததில் இன்று பலரின் எலும்புக் கூடுகள் கண்டெடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், இவ்வழக்கில் மேலும் பல மர்மங்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
News August 4, 2025
உணவு ஆர்டர் பண்றீங்களா? அப்ப இதை கவனிங்க

ஹோட்டல்களில் உணவு ஆர்டர் செய்யும்போது, பொதுவாக கருப்பு நிற பிளாஸ்டிக் டப்பாக்களில் தான் உணவுகள் டெலிவரியாகின்றன. பலரும் வீடுகளில் இந்த டப்பாக்களை மீண்டும் பயன்படுத்துகின்றனர். இது <<17301267>>மிக ஆபத்தானது<<>> என எச்சரிக்கின்றனர் நிபுணர்கள். இந்த பிளாஸ்டிக்கில் அடங்கியுள்ள BPA, phthalates உள்ளிட்ட நச்சு ரசாயனங்கள் இதய-ரத்த நாள நோய்கள், நீரிழிவு, மலட்டுத்தன்மை உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்தும் ஆபத்து அதிகமாம்.
News August 4, 2025
சாதித்தது இளம் படை: தொடரை சமன் செய்தது இந்தியா

ரோகித் சர்மா, விராட் கோலி இல்லாமல் சுப்மன் கில் தலைமையில் இங்கிலாந்து சென்ற இந்திய இளம் டெஸ்ட் அணிக்கு தொடக்கமே சூப்பராக அமைந்திருக்கிறது. கை நழுவிப் போனதாக எண்ணிய தொடரை, கடைசி டெஸ்ட் கடைசி நாளில் தலைகீழாக மாற்றி இருக்கிறது இந்த இளம் படை. 5-வது டெஸ்டில் த்ரில் வெற்றிபெற்றதன் மூலம் 2 -2 என்ற கணக்கில் ஆண்டர்சன் – டெண்டுல்கர் தொடர் சமனில் நிறைவடைந்துள்ளது.Well done boys..!