News January 10, 2025

பெரியார் பல்கலை. துணைவேந்தர் மீதான விசாரணை: தொடரலாம்!

image

சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் மீதான வழக்கு விசாரணையை தொடரலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தடையை நீக்கக்கோரி காவல்துறை தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி உத்தரவிட்ட நீதிபதி வேல்முருகன், வழக்கு விசாரணையை வரும் ஜன.28ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.

Similar News

News September 9, 2025

சேலம்: கனரா வங்கி நிறுவனத்தில் வேலை!

image

சேலம்: இந்திய பொதுத்துறை வங்கியான கனரா வங்கியிந்துணை நிறுவனமான கனரா வங்கி செக்யூரிடீஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள sales, Marketing(Trainee) பணிக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி படித்தால் போதுமானது. ரூ.22,000 சம்பளம் வழங்கப்படும். இதற்கு உரிய ஆவணங்களுடன் ஆன்லைனில் விண்ணப்பிக்க <>இங்கே கிளிக்<<>>. அக்.6ஆம் தேதியே இதற்கு கடைசி நாள். உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News September 9, 2025

சேலத்தில் அறிவித்தார் கலெக்டர்!

image

சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி வெளியிட்டுள்ள அறிக்கையில் , தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இளைஞர்களுக்கு சுயதொழில் துவங்க இ-சேவை மூலம் மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது. தொழில் முனைவோர் திட்டம் மற்றும் நன்னிலம் மகளிர் நில திட்டம் வாயிலாக விண்ணப்பங்களை சமர்ப்பித்து இதில் பயன் பெறலாம் என வலியுறுத்தியுள்ளார்.

News September 9, 2025

சேலம் ரயில் பயணிகளின் கவனத்திற்கு!

image

இணைப்பு ரயில் வருகையின் தாமதம் காரணமாக, சேலம் வழியாக இயக்கப்படும் கோவை- தன்பாத் சிறப்பு ரயில் (03680) இன்று (செப்.09) காலை 07.50 மணிக்கு கோவை ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டிய நிலையில் சுமார் 08.25 மணி நேரம் தாமதமாக மாலை 04.15 மணிக்கு புறப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த சிறப்பு ரயில் சேலம், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்றுச் செல்லும்.

error: Content is protected !!