News March 26, 2024
10ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடக்கம்

தமிழ்நாடு முழுவதும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது. ஏப்ரல் 8 வரை 4,107 மையங்களில் நடைபெறும் இத்தேர்வை மாணவர்கள், தனித்தேர்வர்கள், சிறை கைதிகள் உள்பட 9.38 லட்சம் பேர் எழுதுகின்றனர். முறைகேடுகளை தடுக்க மாநிலம் முழுவதும் 4,591 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஏப்.12-22ம் தேதி வரை விடைத்தாள் திருத்தும் பணி நடைபெறும். மே 10ஆம் தேதி தேர்வு முடிவு வெளியாகிறது.
Similar News
News October 28, 2025
விஜய் அரசியலுக்கே தகுதியற்றவர்: கருணாஸ்

மக்கள் பிரச்னையை மக்களோடு மக்களாக நின்று சந்திக்க திறனற்றவர்கள் அரசியலுக்கே தகுதியற்றவர்கள் என்று விஜய்யை, கருணாஸ் கடுமையாக விமர்சித்துள்ளார். விஜய்யை விட பெரிய கூட்டத்தை கையாண்டவர் விஜயகாந்த் என குறிப்பிட்ட கருணாஸ், சும்மா ஏதோ சப்ப கட்டு கட்டக்கூடாது என்று காட்டமாக பேசினார். கரூர் துயரை அடுத்து விஜய்யின் செயல்பாடுகள் மீதே அதிக விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
News October 28, 2025
ராணிப்பேட்டையில் பள்ளிகள் இயங்கும்.. புதிய அறிவிப்பு

ராணிப்பேட்டையில் இன்று(அக்.28) பள்ளிகள் இயங்கும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. ‘மொன்தா’ புயல் எதிரொலியாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டதாக தகவல் பரவியது. இதுகுறித்து அந்த மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலரை தொடர்பு கொண்டு WAY2NEWS பேசியது. அப்போது, சில ஊடகங்களில் தவறான தகவல் பரவுவதாகவும், இன்று பள்ளிகள் இயங்கும் எனவும் தெரிவித்தார்.
News October 28, 2025
சர்க்கரையை கட்டுப்படுத்த இந்த கசாயம் குடிங்க!

➤இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த, சர்க்கரையை கட்டுப்படுத்த வெற்றிலை கசாயம் உதவும் என சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ➤தேவை: வெற்றிலை, இஞ்சி, மிளகு, சீரகம், சுக்கு, ஏலக்காய், பட்டை & நாட்டுச்சர்க்கரை ➤செய்முறை: இவை அனைத்தையும் 10 முதல் 15 நிமிடம் நன்கு கொதிக்க விடவும். கொதி வந்து நல்ல மணம் வந்ததும் அதை வடிகட்டி சிறிது நாட்டுச்சர்க்கரை சேர்த்து குடிக்கலாம். SHARE IT.


