News January 10, 2025
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், பொது விநியோக குறைதீர் கூட்டம் வருகிற 25 ஆம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பத்து வட்டங்களிலும் நடைபெறுகிறது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு பொது விநியோக திட்டத்தில் உள்ள குறைபாடுகள் குறித்து வட்ட வழங்கல் அதிகாரிகளிடம் புகார் அளித்து தீர்வு காணலாம் என கூறப்பட்டுள்ளது.
Similar News
News December 8, 2025
தஞ்சை: ரூ.85,000 சம்பளத்தில் வேலை!

‘ஓரியண்டல் இன்ஸ்சூரன்ஸ் கம்பெனி’ நிறுவனத்தில் காலியாக உள்ள Administrative Officer பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 300
3. வயது: 21-30 (SC/ST-35,OBC-33)
4. சம்பளம்: ரூ.85,000
5. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
6. கடைசி தேதி: 18.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க:<
8. மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க
News December 8, 2025
தஞ்சை: நிதி உதவி வழங்கிய எம்எல்ஏ

கனமழையால் பாதிக்கப்பட்ட சேதுபாவசத்திரம் தெற்கு ஒன்றியம் குருவிக்கரம்பை பகுதி மாசிலா கருப்பையின் இவர்களின் வீடு சேதமடைந்ததை, பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா. அசோக்குமார் நேரில் பார்வையிட்டு, நிதி உதவி வழங்கியும், புதிய வீடு கட்டும் வகையில் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்நிகழ்வில் முன்னாள் ஒன்றிய செயலாளர் கு.சின்னப்பா, இளைஞரணி அமைப்பாளர் வை.மதன், கிளை செயளாலர் மு.ஏகாம்பரம் உடனிருந்தனர்.
News December 8, 2025
தஞ்சை: மாணவன் கொலை – விசாரணை தொடக்கம்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே பட்டீஸ்வரத்தில் சக மாணவர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவன் விவகாரம் தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பேபி இன்று பள்ளியில் விசாரணை நடத்த உள்ளார். இந்த வழக்கில் 15 பதினொன்றாம் வகுப்பு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மாணவர்களின் மோதல் குறித்து விசாரணை நடத்த உள்ளார்.


