News January 10, 2025
கர்நாடக மாநில துணை முதல்வர் சுவாமி தரிசனம்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில், நேற்று (ஜன.9) கர்நாடக மாநில துணை முதல்வா் சிவக்குமாா் சக்கரத்தாழ்வாா் சந்நிதியில் மகா சுதர்சன யாகம் செய்து வழிபட்டாா். ஒரு நாள் பயணமாக தமிழகம் வந்துள்ள அவர், பிரத்தியங்கரா தேவி கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர், காஞ்சிபுரத்துக்கு ஹெலிகாப்டர் மூலம் வருகை தந்து, வரதராஜ பெருமாள் கோயிலில் தரிசனம் செய்தார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
Similar News
News August 13, 2025
காஞ்சியில் கொலை! வீட்டை சூறையாடிய பெண்கள்

காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர் மாதவன். இவர் கடந்த வெள்ளிக்கிழமை தலையில் பலத்த காயங்களுடன் உயிரிழந்து கிடந்தார். இதுதொடர்பாக 17-வயது சிறுவன் ஒருவரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் மாதவனின் உறவினர்கள் குற்றவாளியின் வீட்டை சூறையாடினர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டள்ளது.
News August 13, 2025
காஞ்சிபுரம்: மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (13.08.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News August 13, 2025
சிங்காடிவாக்கத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

வாலாஜாபாத், சிங்காடிவாக்கம் ஊராட்சியில் “உங்களுடன் ஸ்டாலின் திட்டமுகாம்” நடைபெற்றது. இம்முகாமை கலெக்டர் கலைசெல்வி மோகன், காஞ்சிபுரம் எம்.பி செல்வம், எம்எல்ஏ எழிலரசன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். இம்முகாமில், அப்பகுதியைச் சேர்ந்த திரளான பொதுமக்கள் கலந்த கொண்டு மனு அளித்தனர்.