News January 10, 2025
சர்வதேச பலூன் திருவிழா: அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

தமிழ்நாடு அரசின் சுற்றுலாத்துறை சார்பில், இன்று கோவளம் அருகே உள்ள திருவிடந்தையில் 10ஆவது தமிழ்நாடு – சர்வதேச பலூன் திருவிழா தொடங்கியது. இதில், சுற்றுலாத் துறை அமைச்சர் இரா.ராஜேந்திரன், சிறு – குறு மற்றும் தொழிற்துறை அமைச்சர் தாமு அன்பரசன் ஆகியோர் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர். இந்நிகழ்வில் அரசு உயர் அதிகாரிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். 3 நாட்கள் இந்தத் திருவிழா நடைபெறும்.
Similar News
News August 25, 2025
சென்னை போலீசின் இரவு ரோந்து பணி விவரம்

சென்னையில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த, கிரேட்டர் சென்னை போலீஸ் “Knights on Night Rounds” திட்டத்தின் கீழ் இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை சிறப்பு ரோந்து பணிகள் நடைபெற்று வருகின்றன. திருப்பலிகேன், மயிலாப்பூர், அடையார், டி.நகர், அண்ணாநகர், கொளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, அவசர தேவைக்கு அவர்களின் மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளன.
News August 25, 2025
சென்னையில் மின்தடை..!

சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் குறித்த விவரங்களை மின்சார வாரியம் வெளியிட்டுள்து. அதன்படி பாரிவாக்கம், தேனாம்பேட்டை, கோவிலம்பாக்கம், நன்மங்கலம், தாம்பரம் போன்ற பகுதிகளில் நாளை(ஆக.26) பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி- பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கையாக இருக்க மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.
News August 25, 2025
BIG NEWS: சென்னையில் 2 பேர் பரிதாப பலி

சென்னையில் விநாயகர் சிலை அமைக்க பந்தல் அமைக்கும் போது மின்சாரம் பாய்ந்து 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மாதவரத்தில் பந்தல் அமைக்கும் போது பிரசாந்த் என்பவர் உயிரிழந்துள்ளார். பூவிருந்தவல்லி சொன்னீர்குப்பத்தில் விநாயகர் சிலைக்கு பந்தல் அமைக்கும் போது மின்சாரம் பாய்ந்து பரத் என்பவர் உயிரிழந்துள்ளார். பண்டிகை காலங்களில் உஷாரா இருங்க.