News January 10, 2025

சத்தீஸ்கரில் 3 நக்சல்கள் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை

image

சத்தீஸ்கரில் நடைபெற்ற என்கவுன்ட்டரில் 3 நக்சலைட்டுகள் சுட்டுக் காெல்லப்பட்டனர். சுக்மா மாவட்டம் பலிகுடா அருகே பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த நக்சல்களுடன் துப்பாக்கிச் சண்டை மூண்டது. இதில் 3 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து அங்கு தேடுதல் வேட்டை நடத்தப்படுகிறது.

Similar News

News February 3, 2026

பள்ளி மாணவன் பையில் கஞ்சா: அரசை சாடிய நயினார்

image

சென்னையில் அரசு பள்ளியில் 11-ம் வகுப்பு மாணவன் கஞ்சா எடுத்து சென்ற சம்பவத்தை சுட்டிக்காட்டி, அரசை நயினார் நாகேந்திரன் கடுமையாக விமர்சித்துள்ளார். பள்ளி மாணவர்கள் கைகளில் கஞ்சாவும், பைகளில் பட்டாக்கத்தியும் புழங்கும் நிலையில், ‘கல்வியில் சிறந்த TN’ என்று விழா எடுத்ததற்கு திமுக வெட்கித் தலைகுனிய வேண்டும் எனவும் சாடியுள்ளார். மேலும், திமுகவை அகற்றினால் மட்டுமே TN நிம்மதிப் பெருமூச்சு விடும் என்றார்.

News February 3, 2026

மாதம் ₹1,500.. தமிழக அரசு ஹேப்பி நியூஸ்

image

மாற்றுத்திறனாளிகள் (ஆண்கள், பெண்கள்) தங்கள் அன்றாட செலவுகளை பூர்த்தி செய்ய ஏதுவாக TN அரசு மாதம் ₹1,500 வழங்கி வருகிறது. இந்த ஓய்வூதியம் பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படும். இந்த ஓய்வூதியத்தை பெற விரும்பும் மாற்றுத்திறனாளிகள், VAO, தாசில்தாரை சந்தித்து விண்ணப்ப படிவத்தை பெற்று, உரிய ஆவணங்களுடன் மீண்டும் சமர்ப்பிக்க வேண்டும். மேலும், <>TNesevai <<>>இணையதளத்திலும் விண்ணப்பிக்கலாம்.

News February 3, 2026

கூட்டணி அறிவிப்பு; பிரேமலதா முடிவை மாற்றியது ஏன்?

image

பிப்.3-ல் கூட்டணி முடிவை அறிவிப்பேன் என கூறியிருந்த <<19037842>>பிரேமலதா<<>>, தனது முடிவிலிருந்து பின்வாங்கிவிட்டார். இதற்கு முக்கிய காரணம் சீட் விவகாரம் என சொல்லப்படுகிறது. தேமுதிகவை கூட்டணியில் இணைக்க விரும்பினாலும், திமுக(6), அதிமுக(9+1) தொகுதிகள்தான் தர முடியும் என கறாராக சொல்லிவிட்டார்களாம். இதனால், கூட்டணி அறிவிப்பை தாமதப்படுத்தியுள்ள பிரேமலதா, அதிமுகவா, தவெகவா என கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசனை கேட்கிறாராம்.

error: Content is protected !!