News January 10, 2025

மேலும் சில சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன

image

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மேலும் சில சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. தாம்பரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு நாளை (ஜன.11) இரவு 11.35 மணிக்கும். மறுமார்க்கமாக, 12ஆம் தேதி பகல் 12 மணிக்கும், எழும்பூரில் இருந்து நெல்லைக்கு நாளை இரவு 11.45 மணிக்கும். மறுமார்க்கமாக, 12ஆம் தேதி மதியம் 3.30 மணிக்கும். சென்ட்ரலில் இருந்து மதுரைக்கு நாளை மதியம் 3.30 மணிக்கும், மறுமார்க்கமாக இரவு 7 மணிக்கும் புறப்படும்.

Similar News

News August 25, 2025

சென்னை போலீசின் இரவு ரோந்து பணி விவரம்

image

சென்னையில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த, கிரேட்டர் சென்னை போலீஸ் “Knights on Night Rounds” திட்டத்தின் கீழ் இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை சிறப்பு ரோந்து பணிகள் நடைபெற்று வருகின்றன. திருப்பலிகேன், மயிலாப்பூர், அடையார், டி.நகர், அண்ணாநகர், கொளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, அவசர தேவைக்கு அவர்களின் மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளன.

News August 25, 2025

சென்னையில் மின்தடை..!

image

சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் குறித்த விவரங்களை மின்சார வாரியம் வெளியிட்டுள்து. அதன்படி பாரிவாக்கம், தேனாம்பேட்டை, கோவிலம்பாக்கம், நன்மங்கலம், தாம்பரம் போன்ற பகுதிகளில் நாளை(ஆக.26) பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி- பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கையாக இருக்க மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.

News August 25, 2025

BIG NEWS: சென்னையில் 2 பேர் பரிதாப பலி

image

சென்னையில் விநாயகர் சிலை அமைக்க பந்தல் அமைக்கும் போது மின்சாரம் பாய்ந்து 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மாதவரத்தில் பந்தல் அமைக்கும் போது பிரசாந்த் என்பவர் உயிரிழந்துள்ளார். பூவிருந்தவல்லி சொன்னீர்குப்பத்தில் விநாயகர் சிலைக்கு பந்தல் அமைக்கும் போது மின்சாரம் பாய்ந்து பரத் என்பவர் உயிரிழந்துள்ளார். பண்டிகை காலங்களில் உஷாரா இருங்க.

error: Content is protected !!