News January 10, 2025

பெட்ரோல் பங்கில் ரூ 1 கோடி மோசடி – 2 பேர் கைது

image

வேர்க்கிளம்பி சசிராஜின் பெட்ரோல் பங்கில் மேலாளராக செம்பருத்திவிளை அனீஷ், பணியாளர்களாக அனீஷின் தம்பி அஸ்வின், குட்டைக்குழி ஆகாஷ் ஆகியோர் இருந்தனர். இவர்கள் பெட்ரோல் வரவு செல்வுகணக்குகளில் ரூ.1 கோடி 9 லட்சம் அளவில் மோசடி செய்ததை அறிந்த சசிராஜ், அவர்களிடம் பணத்தைகேட்டபோது கொலைமிரட்டல் விடுத்ததையடுத்து குமரி எஸ்.பியிடம் புகார் அளித்தார். இதையடுத்து அனீஷ், ஆகாஷ் ஆகியோர் நேற்று கைது செய்யப்பட்டனர்.

Similar News

News February 6, 2026

குமரி: ரூ.50,500 சம்பளத்தில் மத்திய அரசு வேலை.. APPLY NOW!

image

மத்திய அரசின் BSNL நிறுவனத்தில் 120 காலிப்பணியிடங்களுக்கு ஆன்லைன் விண்ணப்பம் நேற்று (பிப்.5) முதல் தொடங்கி உள்ளது. பொறியியல் டிகிரி முடித்த 21 – 30 வயதிற்குட்பட்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இதில் ரூ.24,900 முதல் ரூ.50,500 வரை சம்பளம் வழங்கப்படும் நிலையில் ஆர்வமுள்ளவர்கள் இங்கே <>கிளிக்<<>> செய்து மார்ச்.7 வரை விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் உங்களது நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.

News February 6, 2026

குமரி: 8-ம் வகுப்பு மாணவி தற்கொலை

image

பேயன்குழியை சேர்ந்தவர் சஜினி. இவரது மகள் அக்சயா (13) 8-ம் வகுப்பு படித்து வருகிறார். பிப்.4 அன்று அக்சயாவுக்கும், அவரது தங்கைக்கும் வாய் தகராறு ஏற்பட்ட நிலையில் தங்கையின் தலை முடியின் சிறுபாகத்தை அக்சயா வெட்டியதாக கூறப்படுகிறது. தங்கை அழுததால் தாய் தண்டிப்பார் என பயந்த அக்சயா வீட்டு அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து குலசேகரம் போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்து விசாரணை.

News February 6, 2026

குமரி: ஓடும் ரயிலில் செல்போன் திருட்டு

image

ஹைதராபாத் பகுதியைச் சேர்ந்தவர் தன்ராஜ் இவர் மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் சுற்றுலாவிற்கு கன்னியாகுமரி புறப்பட்டார். மதுரை-புனலூர் ரயிலில் இவர் நாகர்கோவில் டவுன் ரயில் நிலையம் வந்தார். தூக்கத்தில் அவரது கைப்பை செல்போன் போன்றவைகள் திருடு போயிருந்து. இதுகுறித்து தன்ராஜ் கொடுத்த புகாரின் பேரில், நாகர்கோவில் ரயில்வே போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!