News January 9, 2025
பொங்கல் பண்டிகை; சிறப்பு பேருந்துகள் இயக்கம்

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையொட்டி தொடர் விடுமுறை இருப்பதால், சென்னையில் இருந்து செல்வோரின் வசதிக்காக நாளை (ஜனவரி 10) முதல் வரும் 13ஆம் தேதி வரை மாநகரப் போக்குவரத்துக் கழகம் சார்பில் கூடுதலாக 320 சிறப்பு இணைப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. கோயம்பேடு, கிளாம்பாக்கம், மாதவரம் பகுதிகளில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
Similar News
News August 26, 2025
மெட்ரோவில் ரூ.26,000 சம்பளத்தில் உடனே வேலை

சென்னை மெட்ரோ நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 12th, ITI, BE முடித்தவர்கள் கலந்து கொள்ளலாம். சம்பளம் ரூ.26,660 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு ஆக.25 முதல் செப்.2ம் தேதி வரை நடைபெறவுள்ள நேர்காணலில் கலந்துகொள்ளலாம். தமிழ் பேசவும், எழுதும் திறனை சோதிக்கும் தேர்வு நடத்தப்படும். தகவலுக்கு<
News August 26, 2025
மந்தைவெளி பேருந்து நிலையம் நாளை முதல் இடமாற்றம்

மந்தைவெளி பேருந்து நிலையம் நவீனமயமாக்கும் பணிகள் காரணமாக, நாளை (27.08.2025) முதல் தற்காலிகமாக இடமாற்றப்படுகிறது. தற்போது இயங்கும் பேருந்துகள் மந்தைவெளி MRTS, பட்டினப்பாக்கம் பேருந்து நிலையம், லஸ் கர்னர் அருகே நிறுத்தப்படும். மாதாந்திர பயணச்சீட்டு விற்பனை மையம் பட்டினப்பாக்கம் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. பொதுமக்கள் இத்தகவலை ஷேர் பண்ணுங்க.
News August 26, 2025
திருவான்மியூர் அருகே விபத்து: இளைஞர் பலி

திருவான்மியூரில் பைக், சைக்கிள் நேருக்கு நேர் மோதி சாலைத் தடுப்பில் இடித்ததில் இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரித்விக் ராய்(24) என்பவர் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு பெண் தோழியை அழைக்க பைக்கில் சென்ற போது விபத்தில் சிக்கி உயிரிழந்தார். மேலும், இவ்விபத்தில் சைக்கிளில் வந்த ரமேஷ் என்பவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.