News January 9, 2025
ரயில் மறியல் வழக்கில் எம்எல்ஏ, எம்பி விடுதலை

கடந்த 2018- ம் ஆண்டு சேலம் மாவட்டம், ஆத்தூரில் ரிஷிவந்தியம் எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயன், கள்ளக்குறிச்சி எம்.பி. மலையரசன் ஆகியோர் மத்திய அரசைக் கண்டித்து ரயில் மறியலில் ஈடுபட்ட விவகாரத்தில், ரயில்வேத்துறை சார்பில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், வழக்கை விசாரித்த விழுப்புரம் நீதிமன்றம் எம்.எல்.ஏ., எம்.பி. உள்பட 5 பேரை விடுவித்து உத்தரவிட்டுள்ளது.
Similar News
News November 15, 2025
சேலம் அருகே சோகம் இளம்பெண் மரணம்!

காடையாம்பட்டி அருகே உள்ள காருவள்ளி பகுதியில் விவசாய கிணறு ஒன்றில் இளம் பெண் சடலம் கிடப்பதாக தீவட்டிப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். அதே பகுதியை சேர்ந்த மணி என்பவரது மகள் மஞ்சு ஸ்ரீ என்பதும் 19 வயதான அவர் ஏன் எப்படி கிணற்றில் இறந்து கிடந்தார். என்பது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News November 15, 2025
சேலம்: இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு!

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.
News November 14, 2025
புனித பயணத்திற்கு விண்ணப்பிக்க அழைப்பு!

சேலத்தில் இருந்து ஜெருசலம் புனித பயணம் மேற்கொண்டு திரும்பியகிறிஸ்தவர்களுக்கான மானிய தொகை நேரடியாக வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெற விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பங்கள் வழங்கலாம் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தா தேவி தெரிவித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு www.bcmbcmw.tn.gov.in இணையதளம் வாயிலாக விண்ணப்பங்களை வருகின்ற 28-02-2026ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.


